பயனர்:Saravanan Malaiyaman/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்க்கவகுலம்
வகைப்பாடுபிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
மதங்கள்இந்து
மொழிகள்தமிழ்
நாடுஇந்தியா
மூல மாநிலம்தமிழ்நாடு
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
தமிழ்நாடு
தொடர்புடைய குழுக்கள்தமிழர், வேளிர்

காரி வழிமுறையும் காசினியில் வேளிர்,வேள் பாரி வழிமுறையும் பல்கற்கே நீருள்ளீர்.--முது கபிலர். கோவற் கோமான் மலையமான் வம்சமாக ஆதாரப்பூர்வமாக வாலிகண்டபுரம் கல்வெட்டு ,வரஞ்சுரபுரம் கல்வெட்டு மேலும் திருச்செங்கோட்டில் ஐம்பது கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்,16,17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மோரூர் கல்வெட்டுகள் முதல் திருக்கோவிலூர் வீரட்டானம் கல்வெட்டு,உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டு வரை உறுதிசெய்யப்பட்டு அறியப்படுவோர் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே. தென்னிந்திய அரச குலங்களில் மலையமான் குலமும் முக்கியமான ஒன்று. மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் நரசிங்க உடையான் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க வேண்டி ,பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் உதவியுடன் அழைத்து, அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் திருமணம் செய்வித்தார். இவ்வாறு மூவேந்தர் முன்னிலையில் ஏற்பட்ட மண உறவின் காரணமாகவும், மூவேந்தரின் மக்களுடனும் உண்டான மண உறவின் காரணமாகவும் மலையமான் தெய்வீக ராஜனின் சந்ததியினர் பார்கவ குலம்,பாரியின் வம்சம் எனவும் அழைக்கப்படுகின்றனர்.தெய்வீகராஜனின் மக்கள் மலையமன்னர் நரசிங்க முனையரையர் ,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன் என்ற மூவர்.அதில் மலையை ஆட்சி செய்பவர் மலையமான் எனவும் சமதளத்தை ஆட்சி செய்தவர் நத்தமான் எனவும்,மண்ணும்,மலையும் ஆள்பவர்கல்வி,வீரம் எல்லாவற்றிலும் சிறந்தவர் தேர்ந்தவர் சுருதிமான் எனவும் வழங்கப்பட்டார்கள்.மேற்படி பட்டங்களைக்கொண்ட மலையமான்களாகிய தண்ணிழல் வாழ்நர் (சேர அரச குலத்தார்)என்று அழைக்கப்பட்ட இவர்களின் இனத்தார் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்குமே மலையமன்னர்,நத்தமன்னர் என்ற குறுநிலமன்னர்களாக,பாளையக்காரர்களாக நாட்டார், உடையார்,நயினார்,மூப்பனார் என கிராம நிர்வாகிகளாக தலைவர்களாக இருந்தனர். அவர்களின் வம்சாவழியினர் இன்றைக்கும் அதே பட்டங்களுடனேயே அழைக்கப்படுகின்றனர். குல முதல்வராக குலசேகரன் சுருதிமன்னர் அறியப்படும் காரணத்தால் அவர்தம் வம்சத்தினர் மூப்பனார் ஆவார்.குலசேகரன் சுருதிமானை,குலசேகர ஆழ்வாராகவே கருத வேண்டியுள்ளது.ஏனெனில் பார்க்கவ குலத்தில் சைவ மதத்தின் தாக்கம் பிற்காலத்தே நயினார் என்றே பட்டம் கொள்ளும் அளவிற்கு மேலோங்கி நின்றதால் வைணவப் பற்றுடைய ஆழ்வார் குலசேகரருக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுக்கியுள்ளனர்.தெய்வீகன் மலையமான் வம்சத்தோர் ஆண்டதாக செப்பேடு குறிப்பிடும் பகுதிகள் அனைத்தும் சேரமான் குலசேகர ஆழ்வார் ஆண்ட பகுதிகள்.சுருதிமானின் வரலாறும் ஆழ்வாரை அநேகமாக ஒன்றே என்று காட்டினாலும் வைணவப் பற்றுடையவர் என்ற உண்மையை மறைக்க வேண்டி செய்த பிசகு இன்றைக்கு பார்க்கவ குலத்தார் குலமுதல்வன்(சுருதிமான்) பற்றியே அறியப்படாமல் இருக்கின்றனர். மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான பார்க்கவ குலத்தார் மட்டுமே.பார்கவ குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி,

"பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்" என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி. இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார். என்றைக்கும் பாரியின் வம்சமாக கல்வெட்டு கூறும் பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு வம்சத்தோர் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே. மேலும் “ தெய்வக்கவிதைச்செஞ்சொற்கபிலன் மூரிவண்தடக்கை பாரிதனடைக்கலப் பெண்ணைமலையற் குதவிப்பெண்ணை அலைபுனல்அழுவத்து அந்தரிட்சம்செல மினல்புகும்விசும்பின் வீடுபேறெண்ணி கனல்புகும் கபிலக்கல்லது*. ” –என இராசராச சோழன் கல்வெட்டும் மலையமான் பாரி வம்ச உறவினை மெய்ப்படுத்தும் கல்வெட்டு மூலமும் இவ்விரு வேளிர் வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே..

சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்க்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி.க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழனின் கிளைக்குடியாகவும் பார்க்கவ குலத்தார் வரலாற்றாளர்களால் கூறப்படுகின்றனர்.ஆனால் பெரும்பாலும் இவர்கள் தனித்தே பார்கவ குல க்ஷத்ரியர் என இயங்குகின்றனர்.சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்(மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடும் மண உறவு கொண்டுள்ளனர். பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்னும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள்.

காளியை குலதெய்வமாக கொண்ட போர்க் குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப்பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.சோழனது படை பலமாக,காவலாக விளங்கிய போர்க்குடிகளில் மலையமான் இனம் முதன்மையானது.

மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவர், திருமுடிக்காரியின் மைந்தர் இருவருள் இவரும் ஒருவர். இவர் சோழனின் சேனாதிபதியாக பொறுப்பேற்றவர்.முள்ளூர் மலையை ஆண்டவர்.

சோழ மன்னன் பகை மன்னர்களால் தோற்கடிக்கப்பட்டு இவருடைய முள்ளூர் மலையில் அடைக்கலம் புகுந்தார்.மலையமான் திருக்கண்ணன் பெரும்வீரன் என்பதால் பகைவரை போரிட்டு வென்று சோழ நாட்டை சோழனுக்கே மீட்டுக்கொடுத்தார் என்ற செய்தி புறநானூற்றுப்பாடலில் காணப்படுகிறது.

மன்னர்காலத்திற்கு பின்னர் போர்க்குடியினர் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டனர் என்னும் காலமாற்றத்திற்கு ஏற்ப இவர்களும் விவசாய குடிகளானார்கள். குறுநில மன்னர்கள், வேளிர்கள்,போர் மறவர்கள்,தளபதிகள், ஆகிய இவ்வினத்தார் ஜமீன்களாகவும்,பண்ணையார்களாகவும் மாறினர்.

பார்க்கவ வம்சத்து மன்னர்களில் சிலர்.......

  • தெய்வீகன் நரசிங்க உடையான்,
  • மலையமன்னர் நரசிங்க முனையரையர்,
  • நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,
  • சுருதிமன்னர் குலசேகரன்,(குலசேகர ஆழ்வார் தான் இவர்)
  • மலையமான் திருமுடிக்காரி,
  • தேர்வண் மலையன் என்னும் தேர்வீகன்,
  • மலையமான் சோழியவேனாதிதிருக்கண்ணன்,
  • மலையன்,
  • வேள் பாரி,
  • பாண்டியராய திரணி சுருதிமான்,
  • கூத்தன் வாணராயன் திரணி சுருதிமான்,
  • நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,
  • ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்,
  • கிளியூர் மலையமான் பெரிய உடையானான சேதிராயன்,
  • சதிரன் மலையனான ராசேந்திர சோழ மலையமான்,
  • சூரியன் சாவன சகாயனான மலையகுலராசன்,
  • சூரியன் மறவனான மலையகுலராசன்,
  • சூரியன் பிரமன் சகாயனான மலையகுலராசன்,
  • கிளியூர் மலையமான் நானூற்றுவன் அத்தி ராஜேந்திர சோழ சேதிராயன்
  • கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழன் சேதிராயன்,
  • கிளியூர் மலையமான் அரச கம்பீர சேதிராயன்,
  • கிளியூர் ராசகம்பீர சேதிராயன் கலியபெருமாள் பெரிய நாயனான சேதிராயன்,
  • கிளியூர் ராசகம்பீர சேதிநாடன்,
  • ராசராச மலையராயன் ஆகிய அருளாளப்பெருமான் ராசராச சேதிராயன்,
  • கிளியூர் ஆகாரசூர மலையமான்,
  • ராசேந்திர சோழ மலையகுல ராசன்விக்கிரம சோழ சேதிராயன்.
  • சித்தவடத்தடிகள் எனும் நரசிம்ம வர்மன்
  • உத்தம சோழ மிலாடுடையான்
  • மிலாடுடையான் நரசிம்ம வர்மன் (௨)
  • சேதி திரு நாடன்
  • பெரிய உடையான் கரிய பெருமான் சொக்கப் பெருமாள்.
  • இறையூரன் சேதிராயன்.
  • பெரிய உடையான் கோவலராயன்
  • கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வான்
  • ராசராச சேதிராயன்(கோப்பெருஞ்சிங்கன் மருமகன்)

இவர்கள் போன்று இன்னும் எண்ணற்ற சிற்றரசர்களையும்,தளபதிகளையும்,வேளிர்களையும் கொண்ட அரச குடும்பமே பார்க்கவகுலம். அரசர்களாகவும்,வேளிர்களாகவும் இருந்த காலத்தில்

  • முனையரையர்,மலையமான்,கொங்கராயர்,சேதிராயன்,
  • மிலாடுடையார்,மலாடுடையார்,நத்தமான்,சுருதிமான்,உடையான்,
  • மலையமான்,சேதியராயன்,வன்னிய நாயகன்,பண்டரையர், கோவலராயர்,வாணகோவரையன்,வாணராயர்,வாணவிச்சாதிரன்,
  • காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)பல்லவராயர்,அரையதேவன்,நாடாழ்வான்

போன்ற பட்டங்களுடன் ஆண்டு வந்தவர்கள். மலையமான்,நத்தமான்,சுருதிமான்,இம்மூவரும் அரசன் என்று பொருள் படும் உடையார் என்ற பொதுப்பட்டம் கொண்டவர்கள்.(சுருதிமான்)மூப்பனார் என்ற பட்டம் குல முதல்வர் (HEAD MAN)என்ற பொருளிலும்,நயினார்,என்றபட்டம் நாயன்மார் (மெய்ப்பொருள் மன்னர்,நரசிங்க முனையரையர்)வழியில் பிறந்தோர் என்ற அர்த்தத்தையும் கொண்டது.உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மேற்காண்பவை.

(கன்னட,தெலுங்கு பேசும் உடையார்கள் என உடையார் பட்டம் கொண்டு பலர் இருப்பினும்,பார்க்கவ குலத்தாருக்கு ஆதியிலிருந்தே உடையார் பட்டம் மலைநாட்டு அரசன் என்ற பொருளில் மலாடுடையார் என்ற பொருளில் வந்துள்ளது.மேற்கண்டோருக்கு பார்கவ குலத்தாரோடு எத்தொடர்பும் கிடையாது.

ஆனால் வன்னிய குலத்திலும் பார்கவ குலத்திலும் ஒரே பட்டம் கொண்ட குடும்பத்தார் சிலர் உள்ளனர் என்பதை விளக்குகிறது 18ம் நூற்றாண்டைச்சேர்ந்த கிருஷ்ணாபுரம் செப்பேடு.இதன் மூலம் பார்கவ குலத்தார் வன்னியப்பட்டமும் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.

சுருதிமான் மூப்பனார்கள் கத்திக்காரர்கள்(கத்திரியர்) என்ற மெய்க்காப்பாளர் பட்டம் பெற்றவர்கள் இவர்கள் ராஜராஜனின் காந்தளூர் சாலைப்படை எடுப்பின் போது அவரோடு கேரளம் சென்று போரிட்டவர்கள். காந்தளூர் சாலையை வேரறுத்த ராஜராஜன் மீண்டும் அங்கு கேரளர்கள் தலை தூக்காதவாறு அடக்கி வைக்க இவர்களை அங்கு இருக்குமாறு வைத்து விட்டு தஞ்சைக்கு வந்துள்ளார்.அவ்வாறு அங்கே குடியேறிய பார்கவ குல மலையமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள்(படையாட்சிகள்)என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக் காணலாம்.சுருதிமான்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.அரைய தேவன்,நாடாழ்வான்,வாணகோவரையன்,வாணராயன்,வாணவிச்சாதரன் என்ற பட்டங்களும் மூப்பனார்களுக்கு(சுருதிமான்) இருந்துள்ளது.

பாளையக்காரர்,,பாளையத்தார்,(பாளையங்களின் மன்னர்கள்) காவல்காரர்(ஊர்க்காவல் பணி) பண்டாரத்தார்,பண்டாரியார்(கருவூல அதிகாரி)உடையார்(அரசர்),மலையமன்னர்,நத்தமன்னர்,சீமை நாட்டார்,சில்லரை கிராமத்து நாட்டார்,மூப்பனார்,நயினார் (நாயன்மார் சைவ மதம் தழுவியவர்கள்) என்று பல வகையான அதிகார பட்டங்களைக்கொண்டு ஆட்சி செய்தவர்கள் பார்க்கவ குல க்ஷத்திரியர்கள்.

பாடம் கற்கும் குல குருவின் பெயரை கோத்திரமாக கூறிக்கொள்ளும் மரபு பிராமணர்,வைசியர் மற்றும் சத்திரியரிடையே மட்டுமே காணப்படுகிறது.

எடுத்துக்காட்டாக பல்லவர்கள் தம்மை பரத்வாஜ கோத்திரமாக கூறிக்கொண்டனர். அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர். சேரனின் நேரடி வாரிசாகவும்,சோழர்களின் கிளைக்குடியாகவும் உள்ள மலையர் குல அரச குடும்பமாகிய இவர்களுக்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முற்பட்ட பாரம்பரியம் உண்டு.புறநானூற்றில் இவர் மரபோர்க்கு அநேக பாடல்களும் உண்டு.

இவர்கள் முதுகுடி அரச மரபினர் என உணர்த்தும் விதமாக,காரியின் மக்களை கிள்ளிவளவனிடமிருந்து காக்கும் பொருட்டு புலவர் பாடுகையில் சோழனின் குடிப்பெருமைகளை கூறி இவர்களும் உன்போன்றே பெருமை கொண்ட தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர் குடி (வேளிர் குல அரச குடி) எனக்கூறும் புறநானூற்றுபாடல் உள்ளது.

இரண்டாயிர வருடத்திற்கும் மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட இவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே வடமொழி ஆதிக்கத்தால் அரச குடி வீரர்கள் கத்திரியர் என்ற தமிழ் சொல்லின் அர்த்தப்படும்படி பார்கவ குல சத்ரியர் என அறிவித்துள்ளனர்..சில அறிவாளிகள் கூறுவது போல மலையமான் நாட்டு மக்கள் அனைவரும் மலையமான்,சுருதிமான் என்று கூறிக்கொண்டால் ஐம்பது லட்சம் மனிதர்களாவது பார்க்கவ குலம் என்று அறியப்படுவார்கள் மற்றும் மலையமான் நாட்டில் வேறு சாதிகளே காணப்படாது.

பார்க்கவ குலத்தவரே மலையமானின் வம்சத்தவர்கள் என்று ஆதாரங்கள் அநேகம் உண்டு.அதனை மாற்றவே முடியாது. மலையமான் குலமான இவர்கள் தற்போதும் சில லட்சம் பேர்களே உள்ளனர்.இவர்களை ஜாதி அமைப்பு என்பதைக்காட்டிலும் தமிழ் நாட்டில் தற்போதும் உள்ள மலையமான் வம்சத்தின் பார்கவ கோத்திர க்ஷத்ரியக் குடும்பமாக கூறுவதே தகுதியானது. மலையமான் காசுகள் திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன. அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கி.மு 1 ஆம் நூற்றாண்டு ஆகும்.

https://www.tamildigitallibrary.in/coins-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZYdkhyy


மலையமான்கள் ஆண்ட பகுதி: இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும். மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம். மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் திருமுனைப்பாடிநாடு, சேதிநாடு, மகதநாடு; சகந்நாதநாடு எனவும் அழைக்கப்பட்டது.

பட்டங்கள்: மலையர் கோன்:மலையமான் இமயவரம்பன் மலைய குல ராசன் மலாடர் கோமான் மலாடுடையார் மிலாடுடையார் அரைய தேவன் மலையரையர் மலையராயர் மலையரசன் கொங்கர் கோன்:கொங்குராயர் கொங்கராய பாளையத்தார் வானவன்: வானாதிராயர் வானராயர் வானகோவரையர் வானவிச்சாதிர நாடாழ்வான் சேதியன்(வெட்டுதல் என்ற பரசுராமரின் கோடாலியை ஏந்திய சத்திரியன்) சேதி நாடன் சேதியர் கோன். மகோதையபுரம் ஆண்டவன்:மகத நாடாள்வார் மகத நாடன் நாடாள்வான் வில்லாளன் சூரிய வம்சத்து உதயன் மரபினர்: சூரியன் உதயன்(உடையான் என திரிந்துள்ளது) இரண கேசரி வர்மன் பெருமாள்

உதயன்: "மறப்படைக் குதிரை மாறா மைந்தன் துறக்கம் எய்திய...உதியன் சேரல் பெரும்சோறு(பதிற்றுபத்து) சூரியன் உதயன்(உடையான் என திரிந்துள்ளது) இரண கேசரி வர்மன் பெருமாள் இது சூரிய வம்சத்து சேரன் என்ற பெயரே முற்காலத்தில் உதயன் சேரலாதன் என்றும் பிற்காலத்தில் ரவி(உதயன்) பாஸ்கர(மார்தாண்டன்) வர்மா என்று பெயர் வழங்கியுள்ளது. (எ-டு)சேர மன்னர்கள் பட்டியல்: உதியஞ்சேரலாதன் கி.பி. 45-70 Rajashekhara Varman (820- 844 AD)- also called Cheraman Perumal. Sthanu Ravi Varman (844- 885 AD)- contemporary of Aditya Chola Rama Varma Kulashekhara (885- 917 AD) Goda Ravi Varma (917- 944 AD) Indu Kotha Varma (944- 962 AD) Bhaskara Ravi Varman I (962- 1019 AD) Bhaskara Ravi Varman II (1019- 1021 AD) மலையமான் மன்னர்களின் பட்டியல்: உதயன் என்கின்ற சூரியன் பெயரையே முதல் பட்டமாக மலையமான் மன்னர்கள் பூண்டுள்ளனர். சதிரன் மறவனான ராசேந்திர சோழ மலையமான், சூரியன் சாவன சகாயனான மலையகுலராசன், சூரியன் மறவனான மலையகுலராசன், சூரியன் பிரமன சகாயனான மலையகுலராசன், About 4 records of this volume assigned to Uttamachola have been published in S. I. I., Volume III (Nos. 130, 147, 151 and 151-A). About 22 inscriptions in this collection are assignable to Rajaraja I. No. 412 from Siddhalingamadam dated in the 4th year records a gift made by Maladudaiyan . . . . . . It is not impossible that this Sadiran alias Rajendrasola Malaiyaman is identical with a chief of the same name on whose behalf Malaiyaman Suriyan [Ma]ravan Suriyan alias Malaiyakula-rajaan of Kiliyur included in the same division is stated to have made a gift of 192 cows for two perpetual lamps, to god Tiruvidaikalivalvar of Tirukkovalur in Kurukkaik-kurram in Jananatha-valanadu. It appears as though these two chief were brothers, the former being elder of the two on whose behalf the gift was made, and it might not be wrong to suggest that this chief was a father of Sadiran Suriyan [Ma]ravan Suriyan alias Malaiyakularajan (S.I.I., Vol. VII, No. 133). But the exact relationship of these two chiefs is not clear. உதயன் என்கின்ற வார்த்தையே பிற்பாடு உடையான்(சூரிய அரசன்) என மறுவியுள்ளது என்பதை கவனிக்க. சூரியன் மறவன்,சூரிய பிராமன சகாயன்,சூரிய சாவன சகாயன் முதலிய பின்னோட்டங்கள் பாஸ்கர ரவி பெருமாள் அரசரான சேர மன்னர்களை குறிக்கும் சொல்லாகும். வர்மர்: பெருமாள் சூரிய குலங்களில் வரும் பட்டமான வர்மர் என்பதும் இங்கு மலையமான்களில் உள்ளது என்பதை கவனிக்க. மலையமன்னர் நரசிங்க முனையரையர், நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார், சுருதிமன்னர் குலசேகரன்,(குலசேகர ஆழ்வார் தான் இவர்) மிலாடுடையான் நரசிம்ம வர்மன் (௨) பெரிய உடையான் கரிய பெருமான் சொக்கப் பெருமாள். தெய்வீகன் நரசிங்க வர்ம உடையான்,வானவரம்பன்

(அ)மலையர்க்கோன் (அ) சேரன்:

Other titles of Kulasekhara mentioned in the Perumal thirumozhi are Villavar Kon, Malayar Kon வான்=மலை என்று அர்த்தம்,.......வானவன்=மலையன்.......சேரன்= மலைநாட்டிற்கு சிகரத்தை போன்ற தலைவன் மலையமான்=மலையர்களுக்கு மன்னவனான சேர குலத்தான். மலைய மன்னன் பட்டம்:

"இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் குலசே கரனென்றே கூறு.

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை வீரங் கெடுத்தசெங் கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன் மலையர் கோன் கொங்கர் கோன் சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே." மலையமான் மலைய குல ராசன் மலாடர் கோமான் மலாடுடையார் மிலாடுடையார் மலையரையர்மலையராயர் மலையரசன்மலையமான் என்கின்ற பெயருக்கு தமிழ் அகராதியிலே ஒரே அர்த்தம் தான் உண்டு அதாவது சேரன். வானவன்: வான வரம்பன் = மலைகளை எல்லைகளாக உள்ள சேரன்.The Chera kingdom was founded by the integration of various Villvar tribes such as Vanavar(or)Vanar வானவர் குலத்து குறுநில மன்னர்களாக பிற்கால மலையமான்கள்.வானாதிராயர் வானராயர்-மலைராயர் வானகோவரையர்-மலை கோமான் வானவிச்சாதிர நாடாழ்வான் போன்ற மலையர் குலத்து பிற்கால மக்கள் மகதை என்கின்ற ஆத்தூர் பகுதியே ஆண்டனர்.சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்கள் ஆத்தூர் அருகில் உள்ள அகழியூரைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்டனர். சேதிராயர்(கத்தியர்): சேதியன்(வெட்டுதல் என்ற பரசுராமரின் கோடாலியை ஏந்திய சத்திரியன்) பரசுராமர்(பார்க்கவ ராமர்) போன்ற குல குருவால் உருவாக்கப்பட்ட சத்திரியனே சேதியன் (எ) வெட்டுவான்.சேதியர் என்பது வெட்டுதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். தாதை தனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப... (திருவாசகம்-15, 7) 2. அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். மேலுலகுஞ் சேதித்தீர்... (உபதேசகாண்டம்-சூராதி., 50) 3. "'அவர்களை சேதித்தனர்"" என்பது உறுப்புச் சேதித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். (வெட்டுதல் அழித்தல்)பகைவரை சேதிக்கும் தொழிலே மறவனின் வாளின் வேலை.ஆகவே மறக்குல மலையர்கள் ஆண்ட நாடு சேதிநாடு எனப்பட்டது.இந்த பட்டத்துடன் வந்த சூரிய குல சேரனை சேதியர்(அ)வெட்டுவான்(அ)கத்தியன் என கூறினர். . Katiyars claim descent from Lord Ramaof the Suryavanshi Kshatriya clan.

சேதி நாடன் சேதியர் கோன். சேதிராயன் என்கின்ற பட்டத்தில், கிளியூர் மலையமான் அரச கம்பீர சேதிராயன், கிளியூர் ராசகம்பீர சேதிராயன் கலியபெருமாள் பெரிய நாயனான சேதிராயன், கிளியூர் ராசகம்பீர சேதிநாடன், ராசராச மலையராயன் ஆகிய அருளாளப்பெருமான் ராசராச சேதிராயன், கிளியூர் ஆகாரசூர மலையமான், ராசேந்திர சோழ மலையகுல ராசன்விக்கிரம சோழ சேதிராயன். இறையூரன் சேதிராயன். பெரிய உடையான் கோவலராயன் கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வான் ராசராச சேதிராயன். Malaiyaman Nanurruvan Malaiyan alias Rajendrachola­-chedi [ya*]rayan. The donor is referred to in the record as the wife of this chief. She is also mentioned in a record of Kolottunga I’ s successor Vikramachola (No. 422). கொங்கர் கோன்: கொங்கர்களை வென்ற சேரர் தலைவன் கொங்கர்க்கோன் என்ற பட்டம் பூண்டனர். கொங்கு-மலர்,கொங்குநாடு-பூவை நாடு... Kulashekhara Varman ruled around the 8th and 9th centuries. He called himself Kongar Kon (the king of the Kongu people) hailing from Kollinagar (Karur). Though Kongar were defeated by Cheran Senguttuvan in the 2nd century AD, the Kongu region had been occupied by the Kongars of Karnataka Western Ganga Dynasty around 470 AD . கொங்கர்க்கோன் பட்டத்தில் மலையமான் சேரர்: பூவையன் கோன் பூவையன் மலையமான் (அ)ஆழ்வனங்கார மலையமான் கொங்கர் கோன் கொங்குராயர் கொங்கராய பாளையத்தார் (No. 407) and his wife who endowed some land to the same deity, with above mentioned chief who belonged to the Chedi clan is not known. Yet another Maliyaman named Puvan Marudan alias Alvanangara Malaiyaman of Kiliyur in Damar-nadu, a sub-division of Tirumunaippadi, is stated to have made a grant of 1650 kuli of land as tax-free, after purchase from the sabhai of Sirringur, for tiruppali-elichchi of the god Tiruppulippagavadevar of the same place.

மகோதையபுரம் ஆண்டவன்: பிற்கால குலசேகர பெருமாள்கள் மகோதையபுரம் என்ற கொடுங்காலூரை தலைநகரமாக கொண்டனர்.இதை ஆண்ட சேரர் மகோத நாடாள்வான் என பெயர் எடுத்தனர். மலையமான்களும் பின்னாளில் மகதநாடு கொண்டவனாக பாடப்பட்டனர்.சேதிநாடு என்பது மகதநாடு,திருமுனைப்பாடிநாடு,ஜனநாத வளநாடு என்றும் வழங்கப்பட்டது. மகத நாடாள்வார் மகத நாடன் நாடாள்வான் வில்லவர் கோன் என்று புகழப்பட்ட சேரர்களின் பட்டமும் மலையமானிடன் இருந்துள்ளது. (A. R. No. 404 of 1909.) Sidhalingamadam, Tirukkoyilur Taluk, South Arcot District Same wall. Parakesarivarman alias Tribh Kulottungacholadeva : Year 3, day [.] : 90=1135-36 A. D. This inscription contains the prasasti of the king, commencing with Pumevuvalar tirupponmadu punara, etc., mentions the queen Buvanamulududaiyal. It records a gift, made by the king and executed by Tribhuvanachakravatti Konerinmaikondan, of 10 veli of land as tax-free devadana in Adarpadi alias [Kama]vanavan-madiripuram in Kudal in Rajaraja-valanadu,......... A certain Villavarrayan( figures as the signatory. சேரர்களின் மாலைகள்: வாகை மற்றும் நொச்சியை சேரர்கள் சூடினர். மலையமானுக்கு உரிய மலர் மாலைகள். கொன்றை,சண்பகம்,துளவம்,மந்தாரம்,புன்னை,தும்பை,செங்கழுநீர், நொச்சி, வாகை ஆகியன நாம் மேற்கோள் காட்டிய ஆதாரத்தில் மலையமான் இனத்தார் கரூரை ஆண்ட உதயன் சேரலாதன் மரபில் வந்தவரான குலசேகர பெருமாள் வழி வந்த கீர்த்தி பெற்ற சேர மரபினர் என தெளிவாகத் தெரிகிறது. (தொடரும்)

மாட்சி மிகு சேர மலையரின் நேரடி வழித்தோன்றல்கள் யார்?

மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக மலையமான் திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க முனைந்து;பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் உதவியுடன் அழைத்து, அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் திருமணம் செய்வித்தார். இவ்வாறு மூவேந்தர் முன்னிலையில் ஏற்பட்ட மண உறவின் காரணமாகவும், மூவேந்தரின் மக்களுடனும் உண்டான மண உறவின் காரணமாகவும் மலையமான் தெய்வீக ராஜனின் சந்ததியினர் பார்கவ குலம்,பாரியின் வம்சம் எனவும் அழைக்கப்படுகின்றனர்.தெய்வீகராஜனின் மக்கள் மலையமன்னர் நரசிங்க முனையரையர் ,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன் என்ற மூவர்.அதில் மலையை ஆட்சி செய்பவர் மலையமான் எனவும் சமதளத்தை ஆட்சி செய்தவர் நத்தமான் எனவும்,மண்ணும்,மலையும் ஆள்பவர்,கல்வி,கேள்விகளில் தேர்ந்தவர் சுருதிமான் எனவும் வழங்கப்பட்டார்கள்.மேற்படி பட்டங்களைக்கொண்ட மலையமான்களாகிய தண்ணிழல் வாழ்நர் (சேர அரச குலத்தார்)என்று அழைக்கப்பட்ட இவர்களின் இனத்தார் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்குமே மலையமன்னர்,நத்தமன்னர் என்ற குறுநிலமன்னர்களாக,பாளையக்காரர்களாக நாட்டார், உடையார்,நயினார்,மூப்பனார் என கிராம நிர்வாகிகளாக தலைவர்களாக இருந்தனர். அவர்களின் வம்சாவழியினர் இன்றைக்கும் அதே பட்டங்களுடனேயே அழைக்கப்படுகின்றனர். குல முதல்வராக குலசேகரன் சுருதிமன்னர் அறியப்படும் காரணத்தால் அவர்தம் வம்சத்தினர் மூப்பனார் ஆவார்.குலசேகரன் சுருதிமானை,குலசேகர ஆழ்வாராகவே கருத வேண்டியுள்ளது. மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான பார்க்கவ குலத்தார் மட்டுமே.

இதை அன்றைய ஆங்கிலே அரசும் தென்-இந்திய சாதிகளை ஆராய்ந்த எட்கர் தர்ஸ்டனும் பார்க்கவ குல உடையார்களே சேரர் வழித்தோன்றல்கள் என அறிவித்துள்ளனர்.

Tradition traces the descent of the udayans from a certain Deva Raja, a Chera king, who had three wives, by each of whom he had a son, and these were the ancestors of the three castes(Nattamaan,sudermaan,malaiyamaan). There are other stories, but all agree in ascribing the origin of the castes to a single progenitor of the Chera dynasty. It seems probable that they are descendants of the Vedar soldiers of the Kongu country, who were induced to settle in the eastern districts of the Chera kingdom.-udayans- Edgar Thurston. Castes and tribes of southern India (Volume 7)

சேரனின் நேரடி வாரிசாகவும்,சோழர்களின் கிளைக்குடியாகவும் உள்ள மலையர் குல அரச குடும்பமாகிய இவர்களுக்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முற்பட்ட பாரம்பரியம் உண்டு.மலையமான் வம்சத்தவர்கள் சூரிய குலமாக அறியப்படுகின்றனர்.

சோழரின் கிளை குலத்தவர்களும் பார்க்கவர்கள் தான்.

பார்கவ குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி, "பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்" என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி. இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார். என்றைக்கும் பாரியின் வம்சமாக கல்வெட்டு கூறும் பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு வம்சத்தோர் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே. மேலும் “ தெய்வக்கவிதைச்செஞ்சொற்கபிலன் மூரிவண்தடக்கை பாரிதனடைக்கலப் பெண்ணைமலையற் குதவிப்பெண்ணை அலைபுனல்அழுவத்து அந்தரிட்சம்செல மினல்புகும்விசும்பின் வீடுபேறெண்ணி கனல்புகும் கபிலக்கல்லது*. ” –என இராசராச சோழன் கல்வெட்டும் மலையமான் பாரி வம்ச உறவினை மெய்ப்படுத்தும் கல்வெட்டு மூலமும் இவ்விரு வேளிர் வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே.. சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி.க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழனின் கிளைக்குடியாகவும் பார்க்கவ குலத்தார் வரலாற்றாளர்களால் கூறப்படுகின்றனர்.ஆனால் பெரும்பாலும் இவர்கள் தனித்தே பார்கவ குல க்ஷத்ரியர் என இயங்குகின்றனர்.சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்(மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடு மண உறவு கொண்டுள்ளனர்.பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்னும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். .

கரிகாலச்சோழன் காலத்திலிருந்தே மலையமானும் சோழனும் உறவினர் ஆவார்கள்: .

உடையார் ராஜராஜ சோழத்தேவர் என்ற பெயரில் உள்ள உடையார் என்ற பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டம் என்றும் வேறு எந்த சோழனுக்கும் உடையார் பட்டம் கிடையாது,என்று கூறுபவர்கள் உணரட்டும்,கண்டராதித்த சோழன் தொண்டை மானாற்று துஞ்சின உடையார்,ஆனை மேற்றுஞ்சின உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவியார் மலைநாட்டு மழவராயர் மகள்.மழவர்=மலவர்(மலையர்).

கரிகாலனும் மலையமான் மன்னவனும். அபிதான சிந்தாமணி என்னும் நூலில் கரிகாலனும் மலையமானும் நண்பர்கள் என்று கூறியுள்ளது. கரிகாலன் சிறுவனாய் இருந்தபோது அவனது உறவினர்கள் அரியணைக்கு போட்டியிட்டு அதற்கு உரிமையான கரிகாலனை பொய் வழக்கிட்டு சிறையில் அடைத்தனர்.சிறையிலிருந்து தப்பிய கரிகாலன் மலையமான் பாதுகாப்பில் தான் வளர்ந்துள்ளார். கரிகாலன் தந்தை இளஞ்சேட் சென்னி வடுகரை வென்று பாழி அரணை அழிக்க மலையமான் பெரும் படைகள் கொடுத்து உதவியுள்ளார்.இளஞ்சேட் சென்னியால் வெல்லப்பட்ட பாழியின் மகன் பதினோரு வேளிர்களை சேர்த்துக் கொண்டு போர்த் தொடுத்துள்ளான். இங்கு மலையமான் வேளிர்களில் சேர்க்கப்படவில்லை.கரிகாலனின் பெயரர்களாக அறியப்படும் கிள்ளிவளவன்,நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி ஆகியோரின் காலத்தில் சோழநாடு மூன்றாய்ப் பிரிந்தது.அதே சமயம் தான் மலையமான் திருமுடிக்காரி வேந்தனுக்கு பாதுகாப்பும் படை பலமும் அளிக்கக்கூடிய வலிமை பொருந்திய தனி முடி சூடிய சிற்றரசராக இருந்தார். மலையமான் மகள் வானவன் மாதேவி இக்குலமே.ஆதாரமும் வலுவாக உண்டு. டாக்டர்.ராசமாணிக்கனார் ஒரு கட்டுரையில் திருமுனைப்பாடி நரசிங்க முனையரையர் என்ற மலையமான் தான் சுந்தர சோழனை வளர்த்து பாதுகாத்தும் வந்துள்ளார்,என்று கூறியுள்ளார். ஏன் சோழர்கள் மீது மலையமான்களுக்கு இவ்வளவு அக்கறை?காரணம் மிகவும் வலுவானதே. சோழனின் கிளைக்குடி என்று வரலாற்றில் கூறப்படும் குடிகளில் பாதி மலையமான்களின் குடி பட்டங்களே,அவையாவன மலையமான்,சேதிராயர்,கொங்குராயர்,முனையரையர்,மழவரையர் ஆகும். சேதிராயர் என்பதை சூரிய குலத்தின் கிளைக்குடி என்றே கூறியுள்ளனர். உண்மை இவ்வாறு இருக்க சோழராக உரிமை கொள்ளும் முழு தகுதியும் பார்க்கவ குலத்திற்கு உள்ளது எனவும் சோழர்களுக்கு முன்பிருந்தே உடையார் பட்டமுள்ளதையும் சுட்டிக் காட்டியாயிற்று.இவ்வளவு ஏன் சோழர்களின் ஊர் பெயர் உடையார் குடி. உடையாளூர்,உடையார்கள் இன்றைக்கும் அதிகமாக வசிக்கும் ஊர் இங்குதான் ராஜராஜனின் சமாதியும் உண்டு.ராஜராஜனுக்கு உடையார் பட்டமும் உண்டு.

மலையமான்கள் பார்க்கவ குலத்தார் எனக்கூறும் கல்வெட்டுகள் ஆதாரம்.

மலையமான்கள் தங்கள் இனம் என்று பல்வேறு இனத்தினரும் உரிமை கோரும் போது மலையமான் மன்னர்களே தங்களை பார்க்கவ குலத்தவர் எனக்கூறும் ஆதாரங்களில் முதன்மையானது........... திருக்கோவிலூர் திருமால் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி:

"'மிலாடான ஜனநாத வள நாட்டுக் குறுக்கைக் கூற்றத்துப் பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து திரு விடைக் கழி ஆழ்வார் ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகை படையாய்ப் பலகை பிளந்தமை கண்டு பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் கோயிலை இழிச்சி கற்கொண்டு ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து முத்துப் பந்தலுங் கொடுத்து முன்பு கல்வெட்டுப் படியுள்ள நிபந்தங்கள் எல்லாம் ஸ்ரீ விமானத்தே கல்லுவெட்டு வித்தார் நரசிங்க வர்ம ரென்று அபிஷேகம் பண்ணி முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்க வர்மர். சந்திராதித்த வல் எரிக்க வைத்தா திரு நந்தா விளக்கு இரண்டு இவைக்கு விளக்கெரிக்க கொடுத்த சாவா மூவாயப் பெரும்பசு அறுபத்து நாலு." திருக்கோவிலூரிலுள்ள திருமால் கோவிலில் திரு விடைக்கழி ஆழ்வார் சன்னதி ஸ்ரீ விமானம் பழுது பட்டதைக்கண்டு... பார்க்கவ வம்சத்தைச் சேர்ந்த மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் செங்கலால் கட்டப்பட்ட கோயிலை புதிப்பித்து கருங்கற்களால் ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து,ஐந்து ஸ்தூபியும் எடுத்து,உட்பிரகாரத்தையும் ஒருமண்டபத்தையும் கட்டி,முத்துக்கள் பதித்த விதானத்தையும் கொடுத்து,சூரிய சந்திரர் உள்ளவரை விளக்கெரிக்க இரண்டு நந்தாவிளக்குகளும் கொடுத்து (விளக்கு நெய்க்காக)அறுபத்து நான்கு பெரிய பசுக்களும் கொடுத்து இத்தகவலை கல்வெட்டில் வெட்டுவிக்கவும் செய்துள்ளார், நரசிங்க வர்மர் என்ற பட்டாபிஷேக பெயர் கொண்ட மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்டவரான பார்க்கவ வம்சத்தை சேர்ந்த மிலாடு உடையார் நரசிங்க வர்மர். கல்வெட்டு கூறும் உண்மைகள் என்ற நூலில் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் மேற்கண்ட கல்வெட்டைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்னொரு காலம் அறியப்படாத கல்வெட்டில் பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் நரசிங்க வர்மர் பொன்னாலான ஸ்தூபி ஒன்றைக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. மலையமான் மன்னர்களில் ஒருவரான வாணகோவரையன் என்பவர் இந்த கோவிலில் நந்தா விளக்கெரிக்க வேண்டி நிலங்களை தானமளித்துள்ளார் என்று கோவில் வெளிச்சுற்று வடக்குபுறச் சுவரில் ராஜராஜ சோழன் கால கல்வெட்டு கூறுகிறது. அதே பகுதியில் மலையமான் பெரிய உடையான் என்ற மன்னர் கிராம சபையிடமிருந்து வரி விலக்கு பெற்ற நிலத்தினை வாங்கி இறைவனுக்கு தினசரி பூஜை,நைவேத்தியம் செய்விக்க தேவதானமாக வழங்கியுள்ளார் என்றொரு செய்தியும் காணப்படுகிறது. அதே கோவிலில் வேணு கோபாலசுவாமி சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் உடையார் பாளையத்தை ஆண்ட உடையார்கள் சில கட்டிடங்களை எழுப்பியதாக கல்வெட்டு செய்தி காணப்படுகிறது.

சேலம் கல்வெட்டு: சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் தான் தோன்றியவார் கோயில் முன் புதைந்து கிடந்த தூண் கல்வெட்டு ஒன்று கல்வெட்டு ஆய்வாளர் புலவர் துரைசாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது,அதில் பார்க்கவ கோத்திரத்து மிலாடுடையார் செம்பியன் மிலாடுடையார் என்ற மன்னர் பற்றிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னார்க்காடு மாவட்டம் எலவானச்சூர் சிவன் கோவில் கல்வெட்டு,மற்றும் திருக்கோவில் வீரட்டானேஸ்வரர் கோவில் கல்வெட்டு. முதலாம் ராஜேந்திர சோழரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மேற்கண்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் பார்க்கவ கோத்திரத்து ஆதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான். என்ற மன்னன் இருந்ததான குறிப்புகள் காணப்படுகிறது