பயனர்:Krishnapillai Selvakumar
கிருஸ்னப்பிள்ளை செல்வகுமார் என்பவர் 08 மாசி 1985 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் ஒன்றான வெலிக்காகண்டி கிராமத்தில் தேக்கமலை கிருஸ்னப்பிள்ளை மற்றும் சாமித்தம்பி வசந்தாமணி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். ஆரம்பக் கல்வியை வெலிக்காகண்டி விபுலானந்தா வித்தியாலயம் மற்றும் பசறை இல:02 தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை கல்லடி சிவாநந்தா தேசிய பாடசாலையிலும் கற்றார்.