படுமரத்து மோசிகொற்றனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படுமரத்து மோசிகொற்றனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 376.

படுமரம் என்பது ஊரின் பெயர். மோசி என்பது தந்தை பெயர்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

பொருள் தேடச் செல்ல நினைக்கும்போது தலைவன் இவ்வாறு நினைத்துப்பார்த்துப் பொருள் செயச் செல்லாமல் தலைவியோடு தங்கிவிடுகிறான்.

வேனில் காலத்துச் சந்தனம் போல அவள் குளுகுளுப்பானவள். கதிரின் வெப்பத்தை உள்வாங்கிக்கொண்டு குவியும் தாமரை போல வெதுவெதுப்பானவள்.

பொதியில்[தொகு]

மக்கள் நடமாட்டம் இல்லாமல் சூர்மகளிர் நடமாடும் இடம் பொதியில். அந்தப் பொதியில் விளைந்த சந்தனம் போல் தண்ணியாள் என்கிறான்.