நியாயவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நியாயவாதம் (Dialectic) என்பது ஒரு வாதிக்கும் முறை. இது பழைய காலம் முதலே கிழக்கத்திய, மேற்கத்திய மெய்யியல் துறைகளின் மையப் பொருளாக இருந்து வருகிறது. இது வெவ்வேறு கருத்துக்களையுடைய இருவர் ஒருவரது கருத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ளச் செய்யுன் முயற்சியில் ஒருவருடன் ஒருவர் உரையாடும் பொதுவான வழக்கத்தின் அடைப்படையிலானது. இத்தகைய வாதத்தில் ஈடுபடுபவர்கள் சில கருத்துக்களையும், கொள்கைகளையும் எடுகோள்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கிழக்கத்திய, மேற்கத்திய மெய்யியல்களிலும், வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும் பல வகையான வாத முறைகள் தோன்றியுள்ளன.

[தொகு] அறிமுறைக் கொள்கைகள்

நியாயவாதம் மூன்று அல்லது நான்கு மெய்யறிவுக் கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

  1. ஒவ்வொன்றும் மாறும் இயல்புள்ளதும், முடிவுள்ளதும் ஆகும். (இதை எல்லோரும் ஏற்றுக்கொள்வது இல்லை)
  2. ஒவ்வொன்றும் முரண்பாடுகளால் ஆனது.
  3. படிப்படியான மாற்றங்கள் திருப்புமுனைகளுக்கு இட்டுச் செல்கின்றன.
  4. மாற்றங்கள் வட்டமாகவன்றி, சுருளியுருவாகவே நிகழ்கின்றன.
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்