துயில் வாதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூக்க வாதம் அல்லது துயில் வாதம் (sleep paralysis) எனும் இந்நிலையில் தூங்கி முடித்து விழித்தவர்கள் எழுந்திருக்க முயலும் போது தாங்கள் அசைய முடியாததை உணர்வார்கள். எவ்வளவோ முயன்றும் கை கால்களை அசைக்க முடியாதிருப்பதைக் காண்பார்கள். பொதுவாக இது சில நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும். ஒவ்வொரு மனிதரும் தன் வாணாளில் ஒரு முறையேனும் இந்நிகழ்வை உணர்ந்திருப்பர்.
காரணங்கள் [தொகு]
- மெலடோனின் (melatonin) அளவு குறைவதால் தடைபடும் தசையியக்க முடுக்கம்
- மூளையின் பான்ஸ் பகுதியில் உள்ள நரம்புகள் தடைபடுதல்
காரணிகள் [தொகு]
- முறையற்ற துயிற் பழக்கம்
- மன அழுத்தம்
- திடீர் வாழ்க்கை முறை மாற்றங்கள்