திருவாலங்காடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திருவாலங்காடு | |
|---|---|
வடாரண்யேசுவரர் திருக்கோவில் |
|
| அமைவிடம் | |
| அமைவு: | தமிழ் நாடு, இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
திருவாலங்காடு - வடாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் சென்னைக்கருகே அமைந்துள்ளது. காரைக்கால் அம்மையார் தலையால் நடந்துவந்து வழிபட்ட தலம் எனப்படுகிறது. இறைவன் காளியுடன் நடனமாடிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).