திருக்களாச்சேரி நாகநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்களாச்சேரி நாகநாதசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் திருக்கடையூருக்குத் தென்மேற்கில் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தரங்கம்பாடிக்குத் தென்மேற்கில் 6 கிமீ தொலைவில் தில்லையாடியிலிருந்து காட்டுச்சேரி வழியாகவும் வரலாம்.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் குரா மரத்தின் அடியில் மிகப்பெரிய புற்றின் கீழ் ஆதிநாகர் என்ற பெயரில் அமைந்துள்ளார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார்.[1]

வரலாறு[தொகு]

குரா மரத்தைத் தல மரமாகக் கொண்டதால் திருக்குராச்சேரி என்று அழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் திருக்களாச்சேரி என்ற பெயரை இந்த ஊர் பெற்றது. திருமால், பாரத்வாஜர், ஆபஸ்தம்பர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். நாகப்பாம்பு உருவில் திருமால் சிவனை வழிபட்டதால் மூலவர் நாகநாதர் என்றழைக்கப்படுகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்[தொகு]