டி. எம். பீர் முகம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. எம். பீர் முகம்மது இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், மேடைப் பேச்சாளர்.[1] மலையகத்தில் இருந்து வெளியிடப்பட்ட நவஜீவன், நண்பன் ஆகிய வார இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[1] பல சிறுகதைகள், புதினங்களை எழுதியுள்ளார்.[2]

பீர் முகம்மது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். பெரியாரின் திராவிட, சுயமரியாதைப் போராட்டங்களில் பங்குபற்றியவர். 1940களின் இறுதியில் இலங்கைக்கு இடம்பெயர்ந்து, கொழும்பில் புதுக்கடையில் தங்கியிருந்தார். தொழிற்சங்கவாதி ஜி. எஸ். நாயரின் தொடர்பில், மலையகத் தொழிற்சங்க மேடைகளில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.[1] இவருடைய திராவிட முன்னேற்றக் கழக சார்பு மேடைப் பேச்சுக்களினால், இவர் ‘ஈழத்து அண்ணா’ என்று அழைக்கப்பட்டார்.[2]

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • சிறுகதைகள் 6"
  • சதியில் சிக்கிய சலீமா (புதினம்)
  • கங்காணி மகள் (புதினம், 1955)[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 மானா மக்கீன் (பெப்ரவரி 2017). "கொழும்பூர் மானா கிள்ளிய கொளுந்து". ஞானம்: பக். 30. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF. 
  2. 2.0 2.1 2.2 கனக செந்திநாதன். "ஈழத்து இலக்கிய வளர்ச்சி". பார்க்கப்பட்ட நாள் 28-02-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._பீர்_முகம்மது&oldid=2195697" இலிருந்து மீள்விக்கப்பட்டது