செருமனியில் தமிழ்ச் சுவடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலனித்துவ காலத்தில் யேர்மனியர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அங்கிருந்து பெருந் தொகைச் தமிழ்ச் சுவடிகளை தமது நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இவை பல மூல நூல்களைக் கொண்ட சுவடிகள். இந்த வகையான பெருந் தொகை தமிழ்ச் சுவடிகள் தற்போது யேர்மனியில் உள்ளன. அவற்றின் பெரும் பகுதி Hull ஆவணக்காப்பகத்தில் உள்ளன. இவற்றை எண்ணிமப் படுத்தி பரந்த தமிழ்ச் சமூகத்துக்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.