செபாசுட்டியன் முன்சுட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறித்தோஃப் அம்பெர்கர் வரைந்த செபசுத்தியன் முன்சுட்டரின் உருவப்படம். 1552

செபாசுட்டியன் முன்சுட்டர் (Sebastian Münster - 20 சனவரி 1488 – 26 மே 1552),[1][என்பவர் ஒரு செருமன் நிலப்பட வரைஞரும், அண்டப்பட வரைஞரும், கிறித்தவ எபிரேய அறிஞரும் ஆவார். இவரது ஆக்கமான கொஸ்மோகிரபியா என்பதே செருமன் மொழியில் எழுதப்பட்ட உலகம் குறித்த முதல் விளக்கம் ஆகும்.

வாழ்க்கை[தொகு]

இவர் மெயின்சுக்கு அண்மையில் உள்ள இங்கெலீம் என்னும் இடத்தில், அன்ட்ரியாசு முன்சுட்டர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தையாரும் பிற முன்னோர்களும் வேளாண்மை செய்பவர்கள்.[1][2] 1505 ஆம் ஆண்டில் இவர் பிரான்சிசுக்கன் சபையில் இணைந்தார். நான்கு ஆண்டுகளின் பின்னர் துறவிமடத்தில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் கொன்ராட் பெலிக்கனின் மாணவராக இருந்தார்.[1] 1518ல் எபெராட்-கால்சு பல்கலைக்கழகத்தில் இவர் தனது கல்வியை முடித்துக்கொண்டார். சீர்திருத்தத் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்த பேசல் பல்கலைக் கழகத்தில் பணியொன்றை ஏற்றுக்கொள்வதற்காக முன்சுட்டர் பிரான்சிசுக்கன் சபையில் இருந்து விலகி லூதரன் திருச்சபையில் இணைந்தார்.[2][3]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Miles Baynton-Williams. "MapForum Issue 10". Mapforum.com. Archived from the original on 2012-08-14. பார்க்கப்பட்ட நாள் 2012-06-05.
  2. 2.0 2.1 Horst Robert Balz, Gerhard Krause, Gerhard Müller (1994). "Münster, Sebastian (1488-1552)". Theologische Realenzyklopädie 23. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-013852-2. 
  3.   "Münster, Sebastian". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.