சுசில் கொய்ராலா நினைவு அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசில் கொய்ராலா நினைவு அறக்கட்டளை
सुशील कोइराला मेमोरियल फाउन्डेसन
சுருக்கம்எசு.கே.எம்.எப்
Named afterசுசில் கொய்ராலா
வகைஅரசு சாரா அமைப்பு
தலைமையகம்தபாசி, காட்மாண்டு
தலைமையகம்
  • காட்மாண்டு
தலைவர்
சசாங்கா கொய்ராலா
உறுப்பினர் செயலர்
அதுல் கொய்ராலா
வலைத்தளம்http://www.sushilkoiralamemorialfoundation.org/

சுசில் கொய்ராலா நினைவு அறக்கட்டளை (Sushil Koirala Memorial Foundation) நேபாளத்தின் மறைந்த பிரதமர் சுசில் கொய்ராலாவின் நினைவாக 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சனநாயகம், சமூக-பொருளாதார சீர்திருத்தம் மற்றும் திறந்த சமுகக் கொள்கைகளின் அடிப்படையில் மூலோபாய சிந்தனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலோசனையை பிரச்சாரத்தின் மூலம் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது.[1] [2] [3]

பணிகள்[தொகு]

சுசில் கொய்ராலா நினைவு அறக்கட்டளையானது கலந்துரையாடல் நிகழ்ச்சி போன்ற பல நிகழ்வுகளை தீவிரமாக ஏற்பாடு செய்து ஆதரவளித்துள்ளது. பல்வேறு விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்துள்ளது. [4] பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மதன் பண்டாரி விளையாட்டு அகாடமியுடன் இணைந்து நேபாளத்தின் 1 ஆவது கிராண்டு துடுப்பாட்டத் திருவிழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. இப்போட்டிகளின்போது திறமையானவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு துடுப்பாட்ட உபகரணங்களை வழங்குவதன் மூலம் அறக்கட்டளை தன் பங்கை ஆற்றியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sushil Koirala Memorial Foundation". www.sushilkoiralamemorialfoundation.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-06.
  2. "Sushil Koirala Memorial Foundation launched". myrepublica.com. பார்க்கப்பட்ட நாள் 12 August 2017.
  3. "Sushil Koirala foundation established". annanote.com. பார்க்கப்பட்ட நாள் 12 August 2017.
  4. "Sushilkoirala Memorial Foundation". www.sushilkoiralamemorialfoundation.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-09.