சி. தன்னாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. தன்னாசி (பிறப்பு: ஏப்ரல் 4 1943) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். சிமா. இளங்கோ எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வியாபாரியும் கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

கவிதைத் தொகுப்புகள்[தொகு]

  • "இளங்கோ கவிதைகள்";
  • "பயணங்கள் பாதைக்காக அல்ல" (புதுக் கவிதைகள்);
  • "மருதி" (காவியம்);
  • "போர்ட் டிக்சன் மகாமாரியம்மன் புகழாஞ்சலிப் பூக்கள்";
  • "கவிமணியின் கவியரங்கக் கவிதைகள்";

சிறுகதைத் தொகுப்பு[தொகு]

  • "ஒரு தாய் சாபம் பெறுகிறாள்"

கட்டுரைத் தொகுப்பு[தொகு]

  • "கண்ணதாசன் கவிதைகள்: சொல்லும் சுவையும்"

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • சுவாமி இராமதாசர் அவர்களிடமிருந்து "கவிமணி" விருது (1981);
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பணமுடிப்பும் சான்றிதழும் (1984);
  • தமிழ் நாடு வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை விருது (1988);
  • பாரதிதாசன் நூற்றாண்டு விழா காவியப் போட்டியில் முதல் பரிசு (1992);
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சீ.வி. குப்புசாமி விருது (1991)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._தன்னாசி&oldid=3243870" இலிருந்து மீள்விக்கப்பட்டது