சி.வி. ரங்காசார்லு நினைவு அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரங்காச்சார்லு நினைவு அரங்கம்
Rangacharlu Memorial Hall
நகர அரங்கம்
2015 ஆம் ஆண்டு முன்தோற்றம்
Map
மாற்றுப் பெயர்கள்மைசூர் நகர அரங்கம்
பொதுவான தகவல்கள்
வகைநகர அரங்கம்
கட்டிடக்கலை பாணிபுதிய மரபுவழி கட்டிடக்கலை
இடம்மைசூர்
இந்தியா
முகவரிசாமராச உடையார் வட்டம், பெரிய மணிக்கூண்டு, மைசூர்
பெயர் காரணம்திவான் சி.வி. ரங்காசார்லு நினைவாக
நிறைவுற்றது1884
உரிமையாளர்மைசூர் மாநகராட்சி
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை2
வடிவமைப்பும் கட்டுமானமும்
குடிசார் பொறியாளர்கே. சேசாத்ரி அய்யர்

ரங்காச்சார்லு நினைவு அரங்கம் (Rangacharlu Memorial Hall) இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் 1884 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஓர் அரங்கமாகும். மைசூர் நகர அரங்கம் என்றும் நகர அரங்கம் என்றும் பொதுவாக இது அழைக்கப்படுகிறது. 1881 ஆம் ஆண்டு மைசூர் அரசு முடியாட்சியை மீட்டெடுத்த பின்னர் பிந்தைய மைசூரின் முதல் திவானான திவான் சர் சி.வி.ரங்காச்சார்லுவின் நினைவாக இவ்வரங்கம் கட்டப்பட்டது.[1]

அரங்கத்தின் கட்டுமான செலவை மகாராசா பத்தாம் சாமராச உடையார் வழங்கினார். ரங்கச்சார்லுவை அடுத்து வந்த திவான் சர் கே. சேசாத்ரி அய்யர் ரங்காச்சார்லு நினைவு அரங்கத்தின் முதன்மைப் பொறியாலராகவும் வடிவமைப்பாளராகவும் செயல்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rangacharlu Memorial Hall - Town Hall Mysore". InMysore.com. Archived from the original on 10 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 October 2016.