சிவ பிருந்தாதேவி
சிவ பிருந்தாதேவி' (Siva Brindadevi) (1927 – 1998) அன்னை சாயிமாதாபிருந்தாதேவி என அறியப்படும் இவர் ஒரு ஆன்மிகவாதி மற்றும் சமூக சேவகரும் ஆவார்.[1][2]
ஆதீனம்[தொகு]
இவர் புதுக்கோட்டையில் திலகவதியார் திருவருள் ஆதீனம் நிறுவி அதில் ஆதீனமாகவும் செயல்பட்டார்.[3][4][5][6]
பிறப்பு[தொகு]
சாயிமாதா சிவபிருந்தா தேவி தமிழ்நாட்டில்புதுக்கோட்டையில் நட்டுவனார்- நல்லம்மாளுக்கு மகளாக 1927இல் பிறந்தார்.
படிப்பு[தொகு]
இவர், திருக்கோகர்ணம் ஸ்டேட் செகண்டரி பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை படித்தார். அது முதலாக கதை, கவிதைகள் எழுதினார்.
ஆன்மீக ஈடுபாடு[தொகு]
புதுக்கோட்டை ராணியார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான், ஆன்மீக ஈடுபாடு ஏற்பட்டது. பிறகு பிருந்தவனம் எனும் தம் பெயரைப் பிருந்தாவனதேவி என மாற்றினார். நாளடைவில் புதுக்கோட்டையிலுள்ள திருவருள் மட ஆதீன கர்த்தரானார்.
தேசப்பற்று[தொகு]
1948இல் காந்தி இறந்தபோது அவரைப் பற்றி தம் முதல் கவிதையை எழுதினார். வல்லத்தரசு தலைமையில் நடந்த விழாவில் காந்தி,நேருவின் தியாகத்தைப் பற்றி பேசினார்.
மறைவு[தொகு]
27 நவம்பர் 1998இல் இயற்கையெய்தினார்.
உசாத்துணை[தொகு]
பைம்பொழில் மீரான், தலைநிமிர்ந்த தமிழச்சிகள், சூலை 2007
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "French tourists visit Adheenam". The Hindu. Archived from the original on 2013-08-04. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2013.
- ↑ "Tributes paid to Siva Brindadevi". The Hindu. Archived from the original on 2011-09-14. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2013.
- ↑ "இந்தியாவின் முதல் பெண் ஆதீனத்தில் குரு பூஜை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2013.
- ↑ "முதல் பெண் ஆதீன அதிஷ்டானத்தில் குருபூஜை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2013.
- ↑ "Scholar, social worker, musician honoured". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2013.
- ↑ "திலகவதியார் ஆதீனத்தில் ஐம்பெரும் விழா". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2013.