சிறுவர் இலக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் வரையப்படும் இலக்கியம் ஆகும். பொதுவாக 12 வயதுக்கு உட்பட்டோருக்காக இது எழுதப்படுகிறது. விடலைப் பருவத்தினராக எழுதப்படும் நூல்களும் சிறுவர் இலக்கியம் என்று சில வேளைகளில் வகைப்படுத்தப்படுவதுண்டு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.
வகைகள் [தொகு]
- படக்கதை
- வரைகதை
- ஆத்திசூடி வடிவம்
- கதைகள்
-
- பாட்டி கதைகள்
- தொன்மங்கள்
- அறிவுரை
- அறிபுனை
- பஞ்சதந்திரக் கதை
- வாழ்க்கை வரலாறு
- குழந்தை பாடல்கள்
பண்புகள் [தொகு]
சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், பொருளிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைய வேண்டும். சிறுவர்களுக்கு ஏற்ற அவர்களுக்கு ஈர்ப்பான விடயங்களாக அமைய வேண்டும், நூல் படங்களுடன் ஈர்ப்பாக அமையவேண்டும்.
- கற்பனை
-
- பேசும் மிருகங்கள், அதிசய உயிரினங்கள்
- கற்பனை உலகங்கள்
- சிறுவர் பார்வையில் உலகம்
தமிழ் சிறுவர் இலக்கியம் [தொகு]
- பாடல்கள்
-
- நிலா நிலா ஓடி வா
- ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!
- தத்தாங்கி தத்தாங்கி தட்டும் பிள்ளை
- கைவீசம்மா கைவீசு
- சின்ன சின்ன எறும்பே சிங்கார எறும்பே
- முற்கால சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள்
- தற்கால சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள்