சர்வ தர்ம சம பவ
சர்வ தர்ம சம பவ (Sarva Dharma Sama Bhava) என்பது மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட கருத்தாகும். இது, அனைத்து சமயங்களும் பின்பற்றும் வழிகளின் முடிவு ஒன்றாகவே உள்ளது என்ற சமய சமத்துவத்தைக் குறிக்கிறது.[1]
இச் சொற்றொடரை முதல் முதலில் 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தனது இந்து, முசுலிம் தொண்டர்களின் தகவல் தொடர்புகளில் பிளவினைத் தணிக்கப் பயன்படுத்தினார்.[2][3] பல்வேறு சாதியையும் இனங்களையும் இணைத்து மிகப்பெரிய எதிர்-காலனித்துவ இயக்கத்தை காந்தி உருவாக்க, இக்கருத்தானது பெரிதும் உதவியது.[4][5]
இது, அரசையும் சமயத்தையும் வேறுபடுத்தாமல் அனைத்து சமயங்களையும் அரவணைத்துச் செல்லும் இந்திய அரசின் சமயச்சார்பற்ற கோட்பாட்டின் முக்கியமான கருத்தாகவுள்ளது.
சர்வ தர்ம சம பவ என்பது, "அனைத்து தர்மங்களும்/நம்பிக்கைகளும் சாத்தியமானவையே" என்ற நேரடியான பொருளைத் தந்தாலும், பெரும்பாலும் சமயக் கண்ணோட்டத்தில் "அனைத்து சமயங்களும் ஒன்றே" அல்லது "அனைத்துப் வழிகளும் ஒரே இலக்கை நோக்கியே வழிகாட்டுகின்றன" என்றே மொழிபெயர்க்கப்படுகிறது.
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Haynes, Jeffrey (2020). Peace, Politics, and Religion. MDPI AG. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-03936-664-4.
- ↑ Rakhit, Maanoj (29 July 2013). RKM Propagating the Opposite of What Vivekananda and Ramakrishna Had Said: Call to the Rank and File at RKM! Stand Up and Uphold the Truth. Maanoj Rakhit. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189746490.
- ↑ Losonczi, Peter; Van Herck, Walter (2017). Secularism, Religion, and Politics: India and Europe. Routledge. p. 33.
- ↑ Smith, Donald E (2011). India as a Secular State. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781178595253.
- ↑ Larson, Gerald James (2001). Religion and Personal Law in Secular India: A Call to Judgment. Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-33990-1.
வெளி இணைப்புகள்[தொகு]
- Sarva Dharma Samabhãva or Sarva Dharma Sambhrama? Essay by David Frawley (Prajna: A Journal of Indian Resurgence, January–March, 1997)