குறும்பனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறும்பனை என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள இவ்வூர் சுமார் 2 கி.மீ கடற்கரையைக் கொண்டுள்ளது. 8000இற்கும் அதிகமான மக்கள் இங்கு வாழ்கின்றனர். இங்குள்ள மக்களின் முதன்மையான தொழில் மீன் பிடித்தலாகும்.

பொருளியல்[தொகு]

மக்களில் பெரும்பாலோர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். பட்டதாரிகள் மின்பிடி தொழிலில் இறங்காமல் நகரங்களிலோ அயல்நாடுகளிலோ வேலையை எதிர்பார்க்கின்றனர். கற்ற மகளிர் முதன்மையான தொழிலாக கல்வித் துறையில் பணிபுரிகின்றனர்.

புவியியல்[தொகு]

குறும்பனை கடற்கரை 2 கிமீ நீளம் கொண்டது. இது மாவட்ட அளவில் அழகான கடற்கரை ஆகும். இது மேற்கில் சிலுவையா பேராயத்தில் இருந்து தொடங்கி, கிழக்கில் பரியக்காலில் முடிகிறது. இது பரியக்கால் கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamilnadu Tourism: Kurumpanai Beach, Kanyakumari". 11 October 2017.
  2. "Tamilnadu Tourism: St. Ignatius Church, Kurumpanai, Kanyakumari". 11 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்பனை&oldid=3862444" இலிருந்து மீள்விக்கப்பட்டது