குறுங்காடு தங்கசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறுங்காடு தங்கசாமி தமிழகத்தில் குறுங்காடு வளர்ப்பில் முன்னோடிகளில் ஒருவர். இவர் புதுக்கோட்டையில் சேந்தங்குடியில் இருந்த வறண்ட 10 ஏக்கர் நிலத்தை சில பத்து ஆண்டுகளில் குறுங்காடாக மாற்றினார். குறுங்காடு வளர்ப்பினால் பணம் ஈட்ட முடியும் என்றும் நிரூபித்தார்.[1]

விவசாயிகள் தமக்கு சொந்தமான நிலத்தில் மூன்றில் ஒரு பங்கிலாவது ஒரு குறுங்காட்டை உருவாக்க வேண்டும் என்று இவர் பரிந்துரைக்கிறார். பயன்படுத்தப்படாமல் இருக்கும் அரசு நிலங்களிலும் அரசு பல வகை மரங்களை நட வேண்டும் என்று இவர் கூறுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. மாற்றத்தின் வித்தகர்கள் - 3: குறுங்காடு தங்கசாமி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுங்காடு_தங்கசாமி&oldid=2707354" இலிருந்து மீள்விக்கப்பட்டது