கிறிஸ்டியானோ ரொனால்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ டோஸ் சந்தோஸ் அவிரா (பிறப்பு: பெப்ரவரி 5, 1985) போர்த்துகீச கால்பந்து அணியின் தலைவராக 2010 உலக கால் பந்தாட்ட விளையாட்டுக்கு களம் இறங்கி உள்ளார். இவர் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் ஆடி வருகிறார்.

இப்பொழுது விளையாடிவரும் கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் இவராவார். இவர் மான்செஸ்ரர் யுனைரட் கழகத்திலிருந்து றியல் மட்றிட்காக மாறிவந்த பொழுது இவருக்காக ஏலம் விட்ட தொகை சுமார் 132 மில்லியன் அமேரிக்க டாலர்களாகும் அது மட்டுமன்றி இவர் றியல் மட்றிட்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 6 வருடங்களுக்கும் ஒவ்வொரு வருடத்திற்கும் தலா 18 மில்லியன் அமேரிக்க டாலர்கள் கிடைக்கும்.

தனது ஆரம்ப காலங்களில் அன்டோரின்கா என்ற கழகத்திற்காக விளையாடிய றொனால்டோ 1997ல் நிசியோனல் என்ற கழகத்திற்கு மாறினார். அதன் பின் ஸ்போர்ரின் சிபி என்ற கழகத்தில் விளையாடும் பொழுது மன்செஸ்ரர் அணியின் நிர்வாகியான அலெகடஸ் பெர்கஸன் என்பவரால் இனங்காணப்பட்டு 18 வயதே நிரம்பிய இவரை 12.24 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு மன்செஸ்ரறில் விளையாடுவதற்காக ஒப்பந்தமிடப்பட்டார். பின்பு யூரோ 2004ல் முதன் முதலாக போர்த்துகீச அணிக்காக விளையாடுவதற்கு களமிறக்கப்பட்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டியானோ_ரொனால்டோ&oldid=1356000" இருந்து மீள்விக்கப்பட்டது