காதுகள் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காதுகள் என்பது எம். வி. வெங்கட்ராம் எழுதிய ஒரு தமிழ் புதினமாகும். இது 1993 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூலாகும்.[1][2]

கதைச்சுருக்கம்[தொகு]

தாமச சக்தி என்று கூறிக்கொள்ளும் காளி தெய்வமானவர், முருக பக்தனான மகாலிங்கத்தை ஒலி, காட்சி, வாசனை எனப் பல வடிவங்களில் அரூபமாக அலைக்கழித்து, ஓட ஓட வாழ்க்கையின் ஓரத்துக்கு விரட்டி அல்லல்படுத்தும் அனுபவங்கள்தான் இந்த புதினம்.[3]

பின்னணி[தொகு]

எம். வி. வெங்கட்ராம் தன் வாழக்கையின் சுமார 20 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டு இந்தப் புதினம் எழுதப்பட்டது.[4] இவருக்கு இவ்வாறான மாயக் குரல்கள் கேட்டு அதனால் பல ஆண்டுகள் துன்புற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதுகள்_(புதினம்)&oldid=3086084" இலிருந்து மீள்விக்கப்பட்டது