கரும்பு கட்டை பயிர் சாகுபடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறுதாம்பு சாகுபடி அல்லது கட்டை பயிர் சாகுபடி (Sugarcane ratoon crop cultivation) என்பது நடவு கரும்பை அறுவடை செய்த பின், மீண்டும் அடிக்கரும்பை சாகுபடிக்கு கொண்டு வருவதைக் குறிப்பதாகும்.[1] பொதுவாக இச்சாகுபடி முறைய்யானது கரும்பில் முதன்மையாக பின்பற்றப்படுகிறது, என்றாலும் பருத்தி, சம்பங்கி, சோளம், கீரைகள் போன்ற பயிர்களிலும் இம்முறை பின்பற்றப் படுகிறது.

கரும்பில் கட்டைப் பயிர் சாகுபடி[தொகு]

  • முதல் கரும்பு அறுவடை முடிந்தபின் கரும்பு தோகையை தீயிட்டு அகற்றிவிடவேண்டும்.
  • உடனே வயலலில் நீர்பாய்ச்ச வேண்டும்.
  • நிலமட்டத்திற்கு கீழ் கரும்பு கட்டைகளை செதுக்கி விடவேண்டும்
  • பார்களை உடைத்துவிடவேண்டும்.
  • பாலிதீன் பைகளில் வளர்த்த கரும்பு நாற்றுகளை பயன்படுத்தி பாடுவாசி (gap filling) நிரப்ப வேண்டும்.
  • 25% தழைச்சத்தை கூடுதலாக இட வேண்டும்.
  • பின் அனைத்து செயல்முறைகளும் நடவுகரும்பை போல் செய்ய வேண்டும்.

கரும்பு சாகுபடியில் ஒரு நடவு, இரண்டு கட்டை பயிர்,என சாகுபடி செய்தால் லாபம் பெறலாம்.

சான்றுகள்[தொகு]

  1. handbook of agriculture, Indian Council of Agricultural Research