கண்டப்பெயர்ச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமியியுள்ள கண்டங்களிள் ஒன்றுக்கொண்டு தொடர்புடன் நகர்வது கண்டப்பெயர்ச்சி ஆகும். இக்கருதுகோள் முதன்முதலில் 1596ஆம் ஆண்டு அபிரகாம் ஒர்டிலீயசு என்பவரால் முன்மொழியப்பட்டு, பின் 1912ஆம் வருடம் ஆல்பிரடு வேகனர் என்பவரால் கோட்பாடாக விளக்கப்பட்டது.
பின்னர் 1960ஆம் வருடங்களில் தக்க நிலவியல் சான்றுகளுடன் "தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு" என்ற கோட்பாட்டுடன், நகர்தலுக்கான காரணமும் கண்டறியப்பட்டது.
