ஊரு ஹஸ்தம்
ஊரு ஹஸ்தம் என்பது இந்து சமய இறை சிற்பங்களிலும், இறை ஓவியங்களிலும் தொடையின் மீது கையை வைத்திருக்கும் அமைப்பாகும். நின்ற திருமேனி சிற்பங்களில் இடது கையாது தொடையின் மீது வைக்கப்பட்டவைகள் உள்ளன. இதனை ஊரு முத்திரை என்றும் அழைப்பர். ஊரு என்றால் தொடை என்ற பொருளில் இந்த முத்திரை அழைக்கப்படுகிறது.
பொதுவாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் இடது கையே தொடையின் மீது வைக்கப்பட்ட நிலையில் உள்ளது. அவ்வாறு வைக்கப்பட்ட கையானது அழுந்தப் பற்றாமல் இருக்குமாறு உள்ளன.
சிற்பங்கள்[தொகு]
- திருவாரூர் கமலாம்பிகை குட்டிகாசனத்தில் அமர்ந்து ஊரு ஹஸ்தம் தாங்கி வீற்றிருக்கிறாள்
- நெல்லை மாவட்டம், சங்கர நாராயணர் கோயிலில் உள்ள சங்கர நாராயணர் சிற்பத்தில் இந்த ஊரு ஹஸ்த முத்திரை உள்ளது.[1]
- வடரங்கம் ஜம்புகேசுவரர் கோயிலில் உள்ள அம்பிகை அகிலாண்டேசுவரி[2]
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள வெங்கடாசலபதி
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/hariharar.htm
- ↑ [குழந்தைப்பேறு கிட்ட முளைப்பயறு பிரார்த்தனை! 16 மே 2016 தினமலர்]