உண்மை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உண்மை (truth) என்னும் சொல் வாய்மை, நேர்மை, உள்ள தன்மை போன்ற பல பொருள்களில் ஆளப்படுகின்றது. மெய்யியலாளர்களும், பிற அறிஞர்களும் "உண்மை" என்பதன் வரைவிலக்கணம் தொடர்பில் ஒத்த கருத்து உடையவர்கள் அல்ல. உண்மை தொடர்பான பல கோட்பாடுகள் இன்னும் சர்ச்சைக்கு உரியனவாகவே உள்ளன.
வாய்மை என்பது சொல் வழுவாமையை குறிக்கும். அதாவது உள்ளத்தில் உள்ளது மாறாமல் அதனை வாய் வழியாக பேசுவது வாய்மை எனப்படும். வாய்மையைப் பற்றி திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது
வாய்மை எனப்படுவது யாதெனின்
யாதொன்றும் தீமை இலாத சொலல்.
இதன் கருத்து என்னவென்றால், வாய்மை எனப்படுவது பிறருக்கு எந்தவித தீங்கும் இல்லாத சொற்களை சொல்வது ஆகும்.