இளையர் (குடி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளையர் என்பவர் சங்க காலக் குடிகளில் ஒருவர். ஆதன், அழிசி மற்றும் சேந்தன் ஆகியோர் இளையர் குடியில் தோன்றியவர்கள்.[1] சேந்தனின் தந்தை அழிசியும், அழிசியின் தந்தை ஆதனும் ஆவர்.[2] இந்த இளையர் குடியினர் வெல்போர் சோழர் என்ற சோழரின் கிளைக் குடியினர் ஆவர்.[3]

ஆட்சிப்பகுதி[தொகு]

இவர்கள் ஆர்க்காடு என்னும் நாட்டை ஆண்டுவந்தனர். இந்த ஆர்க்காட்டை இளையர் குடியில் தோன்றிய அழிசி ஆண்டதால் இக்காட்டை அழிசியம் பெருங்காடு என்றும் அழைப்பர். இக்காட்டில் நெல்லிமரங்கள் அதிகம். இப்பகுதியை பற்றி குறிக்கும் சங்க இலக்கியங்கள் இந்நாட்டை நீர் வளம் (கழனி), நெல்லி மரங்கள், சோழர் குடியாட்சி போன்றவற்றொடு இணைத்துக் காட்டுவதால் இது தஞ்சை மாவட்டத்தின் ஆர்க்காட்டுக் கூற்றமே அன்றி வட தமிழக ஆர்க்காடு இல்லை என அறியலாம்.[4]

படை பலம்[தொகு]

  1. இந்த இளையர் குடியில் ஒருவனான அழிசி தேரில் ஏறி வந்தது கண்கொள்ளாக் காட்சி ஆகும்.[1]
  2. இவர்கள் யானை வேட்டையிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் சிறந்தவர். யானை வெட்டையாடி அதனின் கோட்டை (தந்தம்) தனதாக்கிக் கொள்வர்.[5][6]
  3. இவர்கள் வாட்போரில் வல்லவர்கள்.[7]
  4. இவர்கள் செய்த போரில் வெற்றி பெறுவார்கள்.[3]

பாண்டியர் தொடர்பு[தொகு]

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் ஆதன் அழிசி என்ற ஒருவன் இருந்தான்.[8] இளையர் குடி அழிசி காவிரி ஆற்றின் மருதமரக் கரையில் கட்டி வைக்கப்பட்டான் என்ற செய்தியும் உள்ளது.[9] இந்த இரணடையும் இணைத்துக் காட்டி இருவரும் ஒருவரே என்றும் அழிசி சோழரோடு பகைமை கொண்டு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் இருந்ததால் அதை எதிர்க்கவே ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மீது எதிரிகள் படை எடுத்தனர் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார்.[10] அதனாலேயே சோழ நாட்டு கரையில் அழிசியும் கட்டி வைக்கப்பட்டான் என்றும் கூறுவர்.

இளையர் யார்[தொகு]

மேலே காட்டப்படுள்ள மேற்கோள் சான்றுகள் அனைத்தும் இளையர் என்போரை வாட்போர் வீரர் எனவே காட்டுகின்றன.

  • இளையர் என்போர் வாள் வீரர்கள்.[11]
  • சேந்தன் தந்தை அழிசியின் தலைநகர் ஆர்க்காடு [12]
  • உள்ளூர் மரத்திலிருந்த வௌவால் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அழிசிக்காட்டு நெல்லிக்கனியை விருரும்பியதாம்.[13]
  • ஆதன் அழிசி ஒல்லையூர் தந்த பூதப பாண்டியனின் அவைக்கள நண்பன்.[14]

மூலம்[தொகு]

சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். 2007. பக். 135-138. 

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 குறுந்தொகை - 258:6
  2. திதலை எஃகின் சேந்தன் தந்தை, தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,-(நற்றிணை 190)
  3. 3.0 3.1 நற்றிணை - 87:3
  4. வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் அரியல் அம் கழனி ஆர்க்காடு (நற்றிணை 190)
  5. குறுந்தொகை 258:5
  6. ஏந்து கோட்டு யானைச் சேந்தன்
  7. குறுந்தொகை 258:6
  8. புறம் 71:4-19
  9. குறுந்தொகை - 258:6
  10. #மூலம்
  11. காவிரிப், பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த, ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை, நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், அழிசி ஆர்க்காடு (குறுந்தொகை 258)
  12. நற்றிணை 190
  13. வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு, நெல்லி (நற்றிணை 87)
  14. புறம் 71
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளையர்_(குடி)&oldid=3246330" இலிருந்து மீள்விக்கப்பட்டது