ஆர்யாம்பா பட்டாபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்யாம்பா பட்டாபி (பிறப்பு: மார்ச் 12, 1936) ஒரு இந்திய நாவலாசிரியர் மற்றும் கன்னட மொழி எழுத்தாளர் ஆவார். இவர் திரிவேணி என்று பிரபலமாக அறியப்பட்ட அனசூயா சங்கரின் சகோதரியும், பிரபல கன்னட கவிஞரும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பி.எம்.ஸ்ரீகாந்தையாவின் மருமகள் ஆவார். இவரது புதினங்கள் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன, மிக முக்கியமாக, புட்டண்ணா கனகல் இயக்கிய கப்பு-பிலிபு (1979), கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மூன்று தென்னிந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டது. எம்.ஆர்.விட்டல் இயக்கிய எராது முகா மற்றும் கர்நாடக மாநில விருது மற்றும் சிறந்த படத்திற்கான மெட்ராஸ் பிலிம் லவ்வர்ஸ் அசோசியேஷனின் விருதைப் பெற்றது. ஒய்.ஆர்.சுவாமி இயக்கிய சவதியா நெரலு (1978) மற்றும் சாந்தாராம் இயக்கிய மராலி குடிஜ் (1984) போன்ற திரைப்படங்கள் மாநில விருதை வென்றது. இவரது புதினமான பரம்பரே 1985 இல் கர்நாடக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஆர்யாம்பா ஸ்ரீ பி.எம்.கிருஷ்ணசாமி மற்றும் திருமதி தங்கம்மா ஆகியோரின் இளைய மகள் ஆவார். ஸ்ரீ பி.எம்.கிருஷ்ணசாமி கன்னட இலக்கிய குழுவின் தலைவரான, ஸ்ரீ பி.எம்.ஸ்ரீகாந்தய்யாவின் சகோதரர் ஆவார். ஆர்யாம்பா, பிரித்தானிய இந்தியாவின் முன்னாள் மைசூர் ராச்சியத்தைச் சேர்ந்த, மாண்டியாவில் மார்ச் 12, 1936 இல் பிறந்தார். (இன்றைய நாளில் மைசூர், கர்நாடகம் ).[2] ஆர்யாம்பா, புகழ்பெற்ற எழுத்தாளர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர் ஆவார். அவரது மாமா பி.எம். ஸ்ரீகாந்தையா ஒரு புகழ்பெற்ற அறிஞர் மற்றும் கவிஞர் ஆவார், அவரின் மொழிபெயர்ப்புகள் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழக நூல்களில் உள்ளன. அவரது அத்தை வாணி ஒரு பிரபல நாவலாசிரியர். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர், பிரபாவதி மற்றும் அனசூயா, இருவரும் வெளியிடத் தொடங்கினர். இவருக்கு பெல்லூர் கே.ஸ்ரீகாந்த சுவாமி, பெல்லூர் கே.ராமச்சந்திரா, பெல்லூர் கே.தேவராஜ் மற்றும் பெல்லூர் கே.ரங்கநாத் ஆகிய நான்கு சகோதரர்களும் உள்ளனர்.

ஆர்யாம்பா மைசூர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை (எம்.ஏ) முடித்தார்.[3]

தொழில்[தொகு]

பல ஆண்டுகளில், இவர் 32 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், குழந்தைகளுக்கான 12 புத்தகங்கள், 5 சுயசரிதைகள் (அவர் பேட்டி கண்ட அன்னை தெரசா உட்பட), 6 நாடகங்கள், 3 கட்டுரைகள் மற்றும் ஒரு விளையாட்டு இலக்கியம் உட்பட பல நூல்களை வெளியிட்டுள்ளார்.[4]

ஆர்யாம்பா அன்னை தெரசா மைசூர் சென்றபோது பேட்டி கண்டது உட்பட, தனது பல சுயசரிதைகளுக்காக ஆராய்ச்சி மேற்கொண்டார். கன்னடத்தில் பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைவாக இருந்த நேரத்தில் இவரது சகோதரியைப் போலவே, இவர் புனைகதை எழுதத் தொடங்கினார்.

இவரது எராது முகா சிறுகதைக்காக, கர்நாடக மாநில விருதையும், மெட்ராஸ் பிலிம் லவ்வர்ஸ் அசோசியேஷனின் விருதையும் பெற்றார். மராலி குடிஜ் திரைப்பட கதைக்காக, மாநில விருதை வென்றார். பரம்பரே நாவல் (1985) கர்நாடக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

பரததா மகாபுருஷரு என்கிற பெயரில் உள்ள இவரது இலக்கியப் படைப்பானது, கர்நாடக பல்கலைக்கழகம், II வது வருட பி.யூ.சி படிக்கும் மாணவர்களுக்கு, 2 ஆண்டுகளாக (1977-1978) விரிவான உரை புத்தகமாக பரிந்துரைத்தது. இந்த புத்தகத்தின் சில பகுதிகள் 10 ஆம் வகுப்பு - கர்நாடகா மற்றும் கேரள மாநில பள்ளிகளின் உரை புத்தகத்தில் வெளியிடப்பட்டன.

இவரது ஆறு நாடகங்களும் மைசூரு மற்றும் பெங்களூரு வானொலி நிலையங்களிலிருந்து ஒலிபரப்பப்பட்டுள்ளன. மைசூர் மற்றும் பெங்களூரு முழுவதும் பல இலக்கிய மாநில கருத்தரங்குகளில் இவர் பேசியுள்ளார், அகில இந்திய வானொலி நிலையங்களில் தனது படைப்புகளை வழங்கினார். பல விருதுகளையும் வாழ்த்துக்களையும் வென்றார். பல தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர கன்னட இதழ்கள் மற்றும் ஆவணங்களில் தனது படைப்புகளை வெளியிட்டார். பல நிறுவனங்களில், குறிப்பாக, "மஹிலா சாகித்யா சமீக்ஷே" மற்றும் "சாகித்யா விமர்ஷே" ஆகியவற்றின் தலைமை ஆசிரியராக இருந்தார்.[5]

இவரது நான்கு புதினங்கள் திரைப் படங்களாகவும், பல சிறுகதைகள் மராத்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆர்யாம்பா 1958 இல் ராஜேந்திரபுரா பட்டாபி ராமையாவை மணந்தார். இவரது பொழுதுபோக்குகளில் டென்னிஸ், டேபிள் டென்னிஸ், சதுரங்கம் மற்றும் உலக முத்திரைகள் மற்றும் நாணயங்களை சேகரித்தல் ஆகியவை அடங்கும்.

மாநில விருது

குறிப்புகள்[தொகு]

  1. Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Akademi. பக். 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126008735. https://books.google.com/books?id=QA1V7sICaIwC. பார்த்த நாள்: 1 May 2017. 
  2. "Kannada Novelist Triveni's House In City To Be A Museum". Star of Mysore. Archived from the original on 25 April 2017. பார்க்கப்பட்ட நாள் 25 April 2017.
  3. S.N Shankar (Triveni's husband) (January 2006). Original Documents. 
  4. "Scientist, actor, cricketer among 60 Rajyotsava awardees". Deccan Herald. 31 October 2015. பார்க்கப்பட்ட நாள் 1 May 2017.
  5. "Sahitya Academy award for Aryamba Pattabhi". The Times of India. 5 January 2002. பார்க்கப்பட்ட நாள் 1 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்யாம்பா_பட்டாபி&oldid=3924569" இலிருந்து மீள்விக்கப்பட்டது