அவெத்தா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவெத்தா அல்லது அவசித்தா (Avesta, அவெஸ்தா) என்பது சரத்துஸ்திரர்களின் புனித நூலாகும். தற்போது நமக்குக் கிடைத்திருப்பது பழைய நூலின் ஒரு பகுதியே ஆகும். முழு நூல் அலெக்சாண்டரின் பெர்சியப் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டு விட்டதாய் நம்பப்படுகிறது. இது புனித அவெத்தா (சென் அவெத்தா) எனவும் அழைக்கப்படுகிறது. தற்போதைய சென்-அவெத்தாவில் 5 பாகங்கள் உள்ளன.