அசோக் இலட்சுமண்ராவ் குகடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசோக் இலட்சுமண்ராவ் குகடே (Ashok Laxmanrao Kukade) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எழுத்தாளர் ஆவார். மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய பணிக்காக[1] இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான் பத்ம பூசண் விருது 2019 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.[2] 1938 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1962 ஆம் ஆண்டு புனே பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்றார். 1965 ஆம் ஆண்டு பொது மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். மகாராட்டிராவின் இலத்தூரில் மருத்துவர் பிர்கே, மருத்துவர் அலுர்கர் ஆகியோருடன் இணைந்து விவேகானந்தா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணை நிறுவனராக இயங்கி வருகிறார்.[3]

வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "लातूरचे डॉ. अशोक कुकडे यांना पद्म भूषण पुरस्कार" (in Marathi). Saamna. January 25, 2019. http://www.saamana.com/padma-bhushan-award-to-dr-ashok-kukade-latur/. 
  2. "List of Padma Awardees 2019" (PDF). Padmaawards.gov.in. இந்திய அரசு.
  3. "ग्रंथालय अधिवेशनाच्या स्वागताध्यक्षपदी डॉ. कुकडे" (in Marathi). Sakal. July 20, 2017. https://www.esakal.com/marathwada/latur-news-ashok-kukade-60942. 
  4. "ध्येयनिष्ठ डॉक्टरांमुळे वैद्यकीय व्यवसाय टिकून" (in Marathi). Maharashtra Times. October 15, 2012. https://maharashtratimes.indiatimes.com/pune-news/articleshow/16814251.cms.