அக்ரீ-ரோசனெயிம் வினை
அக்ரீ-ரோசனெயிம் வினை (Acree-Rosenheim reaction) என்பது புரதங்களில் திரிப்டோபான் இருப்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனச் சோதனை ஆகும். ஒரு புரத கலவையுடன் பார்மால்டிகைடு கலக்கப்பட்டு அதனுடன் அடர் கந்தக அமிலம் சேர்க்கப்பட்டு இரண்டு அடுக்குகள் உருவாகின்றன. சோதனை நேர்மறையானதாக இருந்தால் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் ஒரு ஊதா வளையம் தோன்றும். [1][2][3]
உயிர் வேதியியலின் இரண்டு அறிஞர்களின் பெயரால் இந்த சோதனைக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. அதாவது சான் ஆப்கின்சுபல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற அமெரிக்க உயிர் வேதியியலாளர் சாலமன் பார்லி அக்ரீ (1875-1957) மற்றும் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலோ-செருமானிய மருத்துவ வேதியியலாளர் சிக்மண்ட் ஓட்டோ ரோசனெயிம் (1871-1955) ஆகியோர் இவ்விரு அறிஞர்களார்வர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Debajyoti Das (1980). Biochemistry. Academic Publishers. பக். 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-80599-17-5. https://books.google.com/books?id=QqXpWJHICUYC&pg=PA56.
- ↑ Louis Rosenfeld (2 December 2012). Origins of Clinical Chemistry: The Evolution of Protein Analysis. Elsevier. பக். 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-323-15292-1. https://books.google.com/books?id=yUYq53WulGIC&pg=PA76.
- ↑ B. Jain Publishers Staff (1 January 1999). Pocket Medical Dictionary. B. Jain Publishers. பக். 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7021-193-8. https://books.google.com/books?id=hrOadz4G8RQC&pg=PA16.