சோனியா கோகானி
Hon'ble Ms. Chief Justice (Retd.) சோனியா கிரிதர் கோகானி | |
---|---|
குசராத்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி | |
பதவியில் 16 பெப்ரவரி 2023 – 25 பெப்ரவரி 2023 | |
பரிந்துரைப்பு | தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் |
நியமிப்பு | திரௌபதி முர்மு |
தற்காலிக குசராத்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி | |
பதவியில் 13 பெப்ரவரி 2023 – 15 பெப்ரவரி 2023 | |
நியமிப்பு | திரௌபதி முர்மு |
குசராத்து உயர் நீதிமன்றத்தின் நீதிபதி | |
பதவியில் 17 பெப்ரவரி 2011 – 15 பெப்ரவரி 2023 | |
பரிந்துரைப்பு | எஸ். எச். கபாதியா |
நியமிப்பு | பிரதிபா பாட்டில் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 பெப்ரவரி 1961 ஜாம்நகர் |
சோனியா கிரிதர் கோகானி (பிறப்பு 26 பிப்ரவரி 1961) ஓர் இந்திய நீதிபதி. இவர் குசராத் உயர்நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி ஆவார். இதற்கு முன்பு குசராத் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும், நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
வாழ்க்கை[தொகு]
நீதிபதி சோனியா கோகானி 26 பிப்ரவரி 1961 அன்று குசராத்து, ஜாம்நகரில் பிறந்தார். நுண்ணுயிரியலில் இளம் அறிவியல் பயின்றார். பின்னர், இளங்கலைச் சட்டம் மற்றும் முதுகலைச் சட்டம் பயின்றார். [1]
ஜாம்நகரில் உள்ள கேபி சா சட்டக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[1]
10 சூலை, 1995 இல் அகமதாபாத்தின் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியில் சேர்ந்தார். 2003 முதல் 2008 வரை குசராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார். நடுவண் புலனாய்வுச் செயலக சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார். [1]
2008 இல், குசராத் உயர் நீதிமன்றத்தின் ஆட்சேர்ப்புத் துறைக்கான பதிவாளராக நியமிக்கப்பட்டார்.பின்னர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு துறையின் பதிவாளராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். [1] குசராத் மாநில நீதித்துறை அகாதமியிலும் கற்பித்தார். [1] 17 பிப்ரவரி 2011 அன்று குசராத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் மற்றும் 28 சனவரி 2013 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார் [1] 13 பிப்ரவரி 2023 அன்று குசராத் உயர் நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 16 பிப்ரவரி 2023 அன்று குசராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.