இரசினி கோத்தாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரசினி கோத்தாரி (Rajni Kothari, 16 ஆகத்து 1928 – 19 சனவரி 2015) என்பவர் அரசியல் ஆய்வறிஞர், கல்வியாளர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவராவார்[1]. மேலும் சாதியத்தை எதிர்த்தவராகவும், மனித உரிமைகளுக்குப் போராடியவராகவும் இருந்தார்.

பணிகள்[தொகு]

  • பரோடாவில் உள்ள மகாராசா சயாசிராவ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிசெய்தார்.
  • 1968 இல் சமூக வளர்ச்சி ஆய்வு மையத்தைத் (CSDS) தொடங்கினார்[2].
  • 1980இல் லோகாயம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.[3] ர் அறிஞர்கள், செயல் வீரர்கள் ஆகிய இருவரிடையே ஊடாடவும் செயல் புரியவும் இவ்வமைப்பு துணையாக இருந்தது.
  • 1982 முதல் 1984 வரை பி யூ சி எல் என்னும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவராக இருந்தார்[4].
  • சமூக அறிவியல் ஆய்வு இந்தியக் கவுன்சில் (CSSR) என்னும் அமைப்பில் தலைவர் பொறுப்பை ஏற்று அரசியல் சமுக ஆய்வாளர்களுக்கு வழிகாட்டினார்.
  • சவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதன் நெறிமுறைகளை வகுக்க உதவி புரிந்தார்.

எழுத்துப்பணி[தொகு]

பொருளியல் அரசியல் வார இதழ் என்னும் பத்திரிகையில் கட்டுரைகள் பல தொடர்ந்து எழுதி வந்தார். 'இந்தியாவின் அரசியல்', 'இந்திய அரசியலில் சாதி' போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

படைத்த நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Articles by Rajni Kothari". Economic and Political Weekly portal.
  2. "Honorary Fellows: Rajni Kothari". Centre for the Study of Developing Societies (CSDS) portal.
  3. "Right Livelihood Award Laureates: 1985 - Lokayan". Right Livelihood Award Foundation. Archived from the original on 2013-12-10. பார்க்கப்பட்ட நாள் 2014-01-13.
  4. "PUCL National Council office bearers: Former Presidents". People's Union for Civil Liberties (PUCL). பார்க்கப்பட்ட நாள் 2014-01-13.

உசாத் துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசினி_கோத்தாரி&oldid=3543941" இலிருந்து மீள்விக்கப்பட்டது