வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/10
Appearance
அமுதபாரதி என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் ஓவியர் அமுதோனின் இயற்பெயர் மாமண்டூர் குமாரசாமி தாயுமானவர் என்பது ஆகும். இவர் ஐக்கூ (Haiku) என்னும் சப்பானிய கவிதை வடிவத்தில் தமிழ்க் கவிதைகள் எழுதும் முன்னோடிகளில் ஒருவர். அந்தாதி வடிவில் ஐக்கூ எழுதி தமிழ், சப்பானிய கவிதை வடிவங்களை இணைத்தவர். இவர் அமுதோன் என்னும் பெயரில் புத்தகங்களுக்கு அட்டைப்படங்களை வடிவமைக்கிறார்; உள்ளடக்க ஓவியங்களை வரைகிறார். இவரது ஓவியக்கூடம் சென்னை தியாகராய நகரில் உள்ள சிவஞானம் தெருவில் அமைந்திருக்கிறது. பட்டினப்பாக்கத்தில் இல்லம் அமைந்து இருக்கிறது.
அமுதபாரதி 31 ஆகத்து 1939 ஆம் நாளில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் வாழ்ந்த மா. குமாரசாமி – வள்ளியம்மாள் என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.