பருத்தி அரவை ஆலை
Appearance
பருத்தியிலிருந்து பஞ்சு தனியாகவும், விதை தனியாகவும் பிரித்தெடுக்கும் ஆலையினை பருத்தி அரவை ஆலை (Ginning Factory) என்கிறார்கள். இந்த ஆலை பருத்தி அதிகம் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் அதிகமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் தேனி, இராஜபாளையம் ஆகிய ஊர்களில் இந்த ஆலைகள் பல இயங்கிக் கொண்டிருக்கின்றன.