தோழன் (இலங்கை இதழ்)
தோழன் இலங்கை மாவனல்லையிலிருந்து வெளிவந்த ஒரு கலை, இலக்கிய மாத இதழாகும்.
ஆசிரியர்[தொகு]
- நிந்ததாசன்
தொடர்பு முகவரி[தொகு]
நிந்ததாசன், 118, பிரதான வீதி, மாவனல்லை
உள்ளடக்கம்[தொகு]
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், புலவர் அறிமுகங்கள் போன்ற பல்துறை அம்சங்களை இவ்விதழ் தாங்கிவெளிவந்தது. இவ்விதழில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர்களான கலாநிதி மனோகரன், கலாநிதி க.அருணாசலம் ஆகியோரின் ஆக்கங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.