பயனர்:Yuvaraj5589
ஈடில்லா கலாச்சாரம் கலைநயம் கொண்ட தமிழ்நாடு[தொகு]
இந்த உலகத்தில் எத்தனையோ பாரம்பரியங்களும் கலாச்சாரங்களும் நிறைந்திருக்கலாம்.ஆனால் உலகமே வியக்க
கூடிய வகையான பண்புகளிலும் கலாச்சாரங்களிலும் ஈடினை செய்ய முடியாத அளவுக்கு தமிழகத்தின் பண்பாடும், கலாச்சாரமும்
எங்கள் மக்களின் வாழ்க்கை முறையில் ஒன்றிணைந்துள்ளன.உதாரணமாக ஒற்றை வரியில் குறிப்பிட வேண்டும் என்றால் "திருக்குறள்"
இந்த ஒருசொல் தேடி உங்கள் பயணம் அமைந்தால் அதை விட சிறந்த தேடலாக உங்கள் வாழ்வில் ஏதும் அமையாது. ஆம் எங்கள் அய்யன்
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் இரண்டு அடிகள் ஆயினும், இதை விட உலக மக்கள் வாழ்க்கையை புரிந்து கொள்ள வேறு ஏதும் தேவைப்படாது.