உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:தமிழ்க்குடி மகன் சா.சிவபாலன்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது அன்பின் பெரம்பலூர் வாழ் குடியுரிமை வாழ் அன்பு மக்களே! வாழ்க நமது மொழி, வளர்க்க! நமது வாழ்வியல் கலாசாரம்,  நீடுடி நிலைக்கட்டும் நமது பிறந்த நமது தமிழ் பூமி.

அன்பு பெரம்பலூர் வாழ்வியல் அன்பர்களே !

உங்களிடம் ஓர் கலந்துரையாடல் .

அன்பர்களே ! நமது பூமி எனக்கு தெரிந்தவரை பெரம்பலூர்  வானம் பார்த்த பூமி தான்.

இங்கு அனைத்து  வாழ் மக்களும் விவசாய பெரும் மக்கள்தான் .

வானம் சிரித்தால் தான்  நமது மண் மகிழ்ச்சியில் விதையுடன் புணரும் ,நமது விவசாய மக்களின் உழைப்பு நிமிரும் ,நமது வயறு குளிரும் .

ஆனால் இன்று பருவத்தின் பொய்ப்பாலும் மனிதமில்லா மனிதர்களின் ஏய்ப்பாலும் நமது விவசாயம் உளுத்துப்போய் விட்டது.

நமது விவசாய பூமி எல்லாம் அரசியல் ஆதிகாரங்களால் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து விவசாய பெரும்மக்களை  கொலை செய்து விட்டார்கள் .

நமது விவசாய நிலங்களெல்லாம் பெரும் பன்னாட்டு முதலைகளின் வாயில் இரையாய் . ஆனால் விவசாய மக்களின் வாழ்வியலோ அதற்கு மேலும் இரையாய்.

நமது பூமியில் நமது வாழ்வியலும், உரிமைகளும் பறிபோய் விட்டன.

அரசியல் அதிகாரமும்,தனியார் குள்ளநரிகளும் ,பன்னாட்டு முதலைகளின் வாயிலும், நமது ஊரும் நமது மக்களின் வாழ்வியலும் சிக்கி சிதைக்கப்படுகின்றார்கள் .

நமது விவசாய பெருங்குடி மக்களெல்லாம் இன்று அவர்களிடம் கூலி தொழில் செய்யும் அவலத்தையும் . தனியார் நிறுவனங்களின் அடிமை    ஒப்பந்தத்தையும் , ஏற்று வாழ்வியல் செய்யும் அவலத்தை பார்க்கும் பொது நமது இதயம் இரத்தம் வழிகின்றது.

அன்பு மக்களே ! ஒன்றை மட்டும் சொல்கின்றேன் .

இனி நமது பூமி தழைத்து ஓங்க விதைக்க வேண்டும்

உங்கள் அரசியல்   உரிமைகளை , அதுதான் நமது வாழ்வியலையும்  நமது வம்சத்தின் வாழ்வியலையும் ஓங்கிய விருசமாய் வளரச்செய்யும்.

ஆதற்கு உங்களின் ஓட்டுரிமையை விலை நிர்ணயம் செய்யாமல் ,

உண்மைக்கு உண்மையாலும் விதைக்க வேண்டும் .

அதுவே விருசமாகும் படர்ந்து , அதன் நிழலில் நாம் இளைப்பாறுவோம்  எல்லா இன்பமும் பெற்று .

வணக்கம் .