பயனர்:TNSEPONKASI(kanyakumari Dist)/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'

டென்சிங் நார்கே'[தொகு]

டென்சிங் நார்கே 1914-ல் 'திபெத்தில் பிறந்த ஷெர்பா ஆவார்.இவர் தனது இருபத்தொன்றாம் வயதில் எரிக் ஷிப்டன் தலைமையிலான இமயமலையேறும் குழுவில் இடம் பிடித்தார்.இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை எவரெஸ்டின் மீது ஏற திபெத் அரசாங்கம் ஆங்கிலேயருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது.இருப்பினும் அக்குழுவினர் திபெத்திற்குள் நுழைய அனுமதி பெறுவதில் சிரமம் இருந்ததால் குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்ததும் அடிவாரம் திரும்பியது.ஆகையினால் அவரால் முதல் முயற்சியில் மலை உச்சிக்கு செல்ல முடியவில்லை.இருப்பினும் அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை.கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தினாலும் தொடர்ந்து ஆறுமுறை மலை உச்சியை அடைவதென்ற அவரது இலக்கினை அடைய முடியவில்லை. [1]=== நேபாள அரசின் அனுமதி === இரண்டாம் உலகப்போருக்குப்பின் எந்த நாட்டினராக இருந்தாலும் இமயமலையின் தென்புறம் வழியாக எவரெஸ்டில் ஏறலாம் என நேபாள அரசு அனுமதி வழங்கியது.

பிரிட்டிஷ் குழுவினர்[தொகு]

மேஜர் சார்லஸ் வில்லி தலைமையில் ஒரு குழுவினர் எவரெஸ்ட் மலையில் ஏற வந்தனர்.அப்போது டென்சிங் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவ குழு கூறியதால் அவரும் அக்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.டென்சிங் நார்கே தனது 39-வது வயதில் ஏழாவது முறையாக மலையேற தயாரானார்.அக்குழுவில் நியூஸிலாந்து நாட்டைச் சார்ந்த சேர் எட்மண்ட் ஹில்லாரியும் இடம் பெற்றிருந்தார்.இருவரும் சில முகாம்களைக் கடந்து, பல தடைகளைத் தாண்டி 1953 மே 29 காலை 11.30 மணிக்கு எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்தனர்.மகிழ்ச்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். தாம் கொண்டு சென்ற பிரிட்டிஷ் கொடி,இந்தியக் கொடி மற்றும் நேபாளக் கொடிகளை எவரெஸ்ட் மலை உச்சியில் பறக்கவிட்டார் டென்சிங்.தனது சட்டைப்பையில் வைத்திருந்த மிட்டாய்களை எடுத்து, சிகரத்தின் உச்சியில் பனியை இலேசாக தோண்டி அதில் வைத்து அதன்மீது தாம் கொண்ட அதீத அன்பினை வெளிப்படுத்தினார்.டென்சிங்கும் ஹில்லாரியும் சுமார் 15 நிமிடங்கள் மலை உச்சியில் நின்றதுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.மறுநாள் பிரிட்டிஷ் இளவரசி எலிசபெத்தின் முடிசூட்டு விழா. அன்றைய தினம் இச்செய்தி உலகுக்கு அறிவிக்கப்பட்டது.

நேருவின் உபசரிப்பு[தொகு]

டென்சிங்கை தனது வீட்டிற்கு அழைத்த நேரு தன்னிடம் இருந்த விலையுயர்ந்த ஆடைகளை அவருக்குக் கொடுத்து, அவற்றை அணியச்செய்து அழகு பார்த்தார்.டென்சிங்கின் கோரிக்கையை ஏற்று 1954-ல் மலையேறும் கழகத்தைத் தொடங்கி வைத்தார் நேரு.அதில் டென்சிங் பயிற்சியாளரானார். டென்சிங் 1986-ல் தனது 71-வது வயதில் டார்ஜிலிங்கில் காலமானார்.

பெற்ற பட்டங்கள்[தொகு]

  • 1953-ல் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் ஜார்ஜ் பதக்கம் வழங்கினார்.
  • 1953-ல் நேபாள மன்னர் நேபாளத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்னும் பட்டமளித்தார்.
  • 1959-ல் இந்தியா பத்ம பூஷண் விருது வழங்கியது.

ஜம்லிங் டென்சிங்[தொகு]

டென்சிங் நார்கேயின் மகனான ஜம்லிங் டென்சிங் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு, 1996 ல் எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து, தந்தையின் சாதனையைத் தானும் செய்து காட்டினார்.
  1. டென்சிங். எவரெஸ்ட் உச்சியில் வெற்றிக்கொடி நாட்டினேன். நோவெனா ஆப்செட்.