மத்தவிலாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ml:മത്തവിലാസം കൂത്ത്
வரிசை 12: வரிசை 12:


[[en:Mattavilasa Prahasana]]
[[en:Mattavilasa Prahasana]]
[[ml:മത്തവിലാസം കൂത്ത്]]

05:17, 16 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

கேரள குடியாட்ட நடன மரபில் அரங்கேற்றப்படும் மத்த விலாசம்.

மத்தவிலாசம் (मत्तविलासप्रहसन, மத்தவிலாச பிரஹசனம்‎) கி.பி 7ம் நூற்றாண்டில் பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மரால் இயற்றப்பட்ட ஒரு சமற்கிருத அங்கத நாடகம். இதனைத் தவிர பகவதஜ்ஜூகம் என்ற நாடகத்தையும் மகேந்திரவர்ம பல்லவர் இயற்றியுள்ளார்.

ஒரு பகுதி நாடகமான மத்தவிலாசம் சைவப் பிரிவுகளான கபாலிகம், பாசுபதம் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களையும் புத்த துறவிகளையும் பகடி செய்கிறது. பல்லவப் பேரரசின் தலைநகரான காஞ்சிபுரத்தில் மது போதையில் நிதானமிழந்திருக்கும் கபாலிகன் சத்யசோமன் அவனது மனைவி தேவசோமா ஆகியோரின் செய்கைகளை விவரிக்கிறது. புத்த துறவி நாகசேனன், பாசுபத பிரிவைச் சேர்ந்த பாசுபதன் ஆகியோர் இந்நாடகத்தின் பிற முக்கிய கதை மாந்தர். சைவ, புத்த மதங்களை நையாண்டி செய்வதோடு, 7ம் நூற்றாண்டு காஞ்சிபுரத்தின் தோற்றத்தைப் பற்றியும் இந்நாடகம் விரிவாகப் பேசுகிறது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தவிலாசம்&oldid=1190291" இலிருந்து மீள்விக்கப்பட்டது