அக்கம்மா தேவி
அக்கம்மா தேவி (1918 – 2012) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்.
அரசியல் வாழ்வு[தொகு]
இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.1962 ஆம் ஆண்டு நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். இவர் அந்தத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதிநிதி ஆவார்.
பின்னணி[தொகு]
கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற முதல் படுகர் இனப் பெண்மணி அக்கம்மா தேவி ஆவார்.[1] 1962 முதல் 1967 வரை நீலகிரி மக்களவைத் தொகுதியின் மக்களவை பிரதிநிதியாகப் பணியாற்றினார். இவர் இப்பதவியை பெற்ற முதல் பெண்மணி. அப்போதைய சென்னை மாகாணத்தின் (தற்போது தமிழ்நாடு) முதலமைச்சராக இருந்த காமராசர் அக்கம்மா தேவியை மக்களவைப் பிரதிநிதியாக தேர்வு செய்தார்.[1]
இறப்பு[தொகு]
இவர் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு தனது 94 வயதில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள அப்பத்தாலா எனும் கிராமத்தில் உள்ள தன் வீட்டில் இறந்தார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Former Congress MP Akkamma Devi passes away". The Hindu Business Line. 2012-11-23. http://www.thehindubusinessline.com/news/former-congress-mp-akkamma-devi-passes-away/article4126410.ece. பார்த்த நாள்: 2012-12-08.