அக்கம்மா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்கம்மா தேவி (1918 – 2012) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்.


அரசியல் வாழ்வு[தொகு]

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.1962 ஆம் ஆண்டு நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். இவர் அந்தத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதிநிதி ஆவார்.    

பின்னணி[தொகு]

கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற முதல்  படுகர் இனப் பெண்மணி அக்கம்மா தேவி  ஆவார்.[1] 1962 முதல் 1967 வரை நீலகிரி மக்களவைத் தொகுதியின்  மக்களவை பிரதிநிதியாகப் பணியாற்றினார். இவர் இப்பதவியை பெற்ற முதல் பெண்மணி. அப்போதைய சென்னை மாகாணத்தின் (தற்போது தமிழ்நாடு) முதலமைச்சராக இருந்த காமராசர் அக்கம்மா தேவியை மக்களவைப் பிரதிநிதியாக தேர்வு செய்தார்.[1]

இறப்பு[தொகு]

இவர் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு தனது 94 வயதில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள அப்பத்தாலா எனும் கிராமத்தில் உள்ள தன் வீட்டில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கம்மா_தேவி&oldid=3163389" இலிருந்து மீள்விக்கப்பட்டது