இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1957 என்பது 1957-ல் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தால், 1957 மே 11 அன்று வாக்கெடுப்பு நடந்திருக்கும்.
இத்தேர்தலில் வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 735 பேர் வாக்காளராக கொண்டிருந்தது. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மட்டுமே சரியான முறையில் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர், எனவே 23 ஏப்ரல் 1957 அன்று துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தை மே 1957-ல் தொடங்கினார்.[2]