விரிசையருளிளங்குமரன்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
விரிசை அருளிளங்குமரன் என்பவர் திருநெல்வேலி மாவட்டம், விரிசம்பட்டி எனும் ஊரில் குமாரசாமி-செல்லம்மாள் தம்பதிக்கு மகனாக 08-02-1940 அன்று பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் குமாரசாமி என்பது. கல்லூரியில் பயின்றபோது தம் இயற்பெயரைத் தமிழ்ப்படுத்தி,'அருளிளங்குமரன்' என்று மாற்றினார்.
கல்வியும் தமிழ்ப்பற்றும்[தொகு]
விரிசம்பட்டியில் பள்ளிக் கல்வியை முடித்த இவர், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். இவருக்குப் பேராசிரியராக இருந்தவர் சி.இலக்குவனார். அப்பேராசிரியர் இவருக்கு இட்ட பெயர், 'வாடாத் தமிழ் வண்ண மலர்மீது நடக்கும் வரிசை அருளிளங்குமரன்' என்பதாகும்.
ஆற்றிய பணிகள்[தொகு]
இவர் தஞ்சாவூர் மன்னர் சரபோசிக் கல்லூரியில் ஆங்கிலப் பயிற்றுநராக சேர்ந்து, பின்னர் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இறுதியில் குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
நூற்பணிகள்[தொகு]
இவர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய போது, ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தைக்,'காதல் வானில் தேயும் நிலவு' எனும் பெயரில் மொழிபெயர்த்தார். 1966-ஆம் ஆண்டு கவிதை நடையில்- நேரிசை ஆசிரியப்பா வகையில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல், 1999-இல் இவரது துணைவியாரால் பதிப்பித்து வெளியிடப்பட்டது.
பெற்ற விருதுகள்[தொகு]
இவரது தமிழ்ப் பணிகளையும் ஆசிரியர் பணிகளையும் பாராட்டி, தமிழக அரசு இவருக்கு 1995-ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதினை, 05-09-1997 அன்று அன்றைய தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது.
மறைவு[தொகு]
இவர் 26-10-1997 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.
உசாத்துணை[தொகு]
- அ.ம.சத்தியமூர்த்தி, 'தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள்'-மணிவாசகர் பதிப்பகம், சென்னை-2001.