கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்மீன் தொகுதி உருவம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய தமிழ்ப்பாடல் ஒன்று உள்ளது. அதனை இங்குள்ள ஆவணப் பதிவில் காணலாம். இவற்றைப் பற்றிய விளக்கங்களைத் தரும் தொடுப்புகள் இங்குத் தரப்படுகின்றன.
விண்மீன்களைத் தமிழர் 12 ஓரைகளாகவும் [1] நாளைக் குறிக்கும் 27 மீன்களாகவும் கண்டு கணித்துவந்தனர். வாரத்தின் ஏழு நாளும் ஏழு கோள்கள் [2] ராகு, கேது ஆகியவை பஞ்சாங்கக் கணக்கில் நிழல்-கோள்கள்.
அசுவினி - இது ஒரு நாள்-மீன். ஆறு மீன்களைக் கொண்ட தொகுதி [3] - குதிரைத் தலை போல இருக்கும்.[4][5] இரலை, ஏறு, புரவி, யாழ், ஐப்பசி என்னும் பெயராலும் இதனைக் குறிப்பிடுவர். இப் பெயர் கொண்ட நாளை மருத்துவ-நாள் என்றும், தலை-நாள் என்றும் குறிப்பிடுவர். (திவாகர நிகண்டு)
பரணி - இது ஒரு நாள்-மீன். நான்கு கால் நட்டுப் பரண் என்னும் பரணி அமைக்கப்பட்டது போல இருக்கும்.[6][7] அடுப்பு, பூதம், தாழி, பெருஞ்சோறு, போதம், நாடுகிழவோன் என்னும் பெயர்கள் இதற்கு உண்டு. இந்த நாளைத் தருமன் நாள் என்பர். (திவாகர நிகண்டு)
மேழம் என்பது 12 ஓரைமீன் தொகுதிகளில் ஒன்று. இது ஆட்டுத்தலை போல் உருவம் கொண்டிருக்ககும்.[8] இதனை ஆடு என்றும் குறிப்பிடுவர். மேழ மாதத்தைச் சித்திரை மாதம் என்கிறோம். வருடை, புதன், தகர், மறி, மை, கொறி என்னும் பெயர்கள் இதற்கு உண்டு எனச் சேந்தன் திவாகரம் குறிப்பிடுகிறது.