விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 21, 2010
Appearance
- மலேசியாவின் பட்டுவா குகையில் உள்ள முருகன் சிலை (படம்) தான் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையாகும்.
- வழுதுணங்காய் என்பது கத்தரிக் காயின் பழந்தமிழ்ப் பெயராகும்.
- தெளிகுற்றம் இழைத்தோரை காவல்துறையினர் எவ்வித பிடி உத்தரவும் இன்றிக் கைது செய்யலாம்.
- பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப் படி ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது.
- பசுமைப் புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக்கின் கண்டுபிடிப்புகள் 245 மில்லியன் மக்களைப் பசியின் பிடியிலிருந்து காப்பாற்றியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.