விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகஸ்ட் 28, 2010
Appearance
- நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத கொடியாகும்.
- தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டலின் போது திருவெம்பாவை பாடப்படுகிறது.
- நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தற்போதுள்ள நடைமுறையைவிட செம்மை நெல் சாகுபடி முறையினை கையாளுவது அவசியம்.
- சாவகத்தீவம் தான் உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.
- முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர் ஏ. கே. செட்டியார். தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் வரலாறு கூறுகிறது.
- கறையான்கள் பூஞ்சைகளை வளர்ப்பதோடு மட்டுமின்றி அப் பூஞ்சைகளுக்குப் போட்டியாக வேறு தாவரங்கள் வளராமலும் பார்த்துக் கொள்ளும்.