உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேசக் குண்டு வெடிப்பு, 2005

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் தியதி வங்காளதேசத்தின் மொத்தமுள்ள 64 மாவட்டங்களில் 63 மாவட்டங்களில் 300 இடங்களில் 500 குண்டுகள் வெடித்தது. காலை 11:30 மணிக்கு குண்டு வெடிக்க ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தக் குண்டு வெடிப்புச் செயலுக்கு வங்காளதேச ஜமாத்-உல்-முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த இயக்கத்திற்கு அல் காயிதா இயக்கத்தோடு தொடர்பு இருக்கலாம் என நம்பப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. மேலும் ஹர்கத்-உல் ஜிகாத் அல் இஸ்லாமி (Harkat-Ul Jihad al Islami) என்ற இயக்கமும் இக்குண்டு வெடிப்பில் வங்காளதேச ஜமாத்-உல்-முஜாகிதீன் இயக்கத்தோடு இணைந்திருந்தோம் என அறிவித்தது. வங்காளதேச ஜமாத்-உல்-முஜாகிதீன் இயக்கமானது அப்துர் ரஹ்மான் தலைமையில் இயங்கும் அமைப்பாகும். இந்த இரு இயக்கங்களும் வங்காளதேச அரசால் தடை செய்யப்பட்டன. 2006 ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேடுதல் வேட்டையில் அப்துர் ரஹ்மான், பங்களா பாய் மற்றும் இவர்களது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.[1] அதில் 4 பேருக்கு 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தியதி தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.[2] இக்குண்டு வெடிப்பில் 2 பேர் மரணமடைந்தனர் 50 பேர் காயமடைந்தனர்.[3]

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ."Top Bangladesh militant captured: police" பரணிடப்பட்டது 2007-03-31 at the வந்தவழி இயந்திரம், Reuters news report, 6 March 2006.
  2. "Bangladesh seeks regional cooperation against terrorism"[தொடர்பிழந்த இணைப்பு], PTI News, 24 Feb 2009
  3. "Bombs explode across Bangladesh". BBC News. August 17, 2005. பார்க்கப்பட்ட நாள் August 17, 2013.