முதலாம் விக்ரகராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் விக்ரகராசன்
சகமான அரசன்
ஆட்சிக்காலம்சுமார் 734-759 பொ.ச.
முன்னையவர்முதலாம் அஜயராஜன்
பின்னையவர்முதலாம் சந்திரராஜா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

விக்ரகராசன் (Vigraharaja I) (ஆட்சி 734-759 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார். [1]

இவர் தனது தந்தையான முதலாம் அஜயராஜனுக்குப் பிறகு சகமான ஆட்சியாளராக ஆனார். [2] பிரித்விராஜ விஜயம் என்ற நூல் வழக்கமான துதிகளைப் பயன்படுத்தி இவரைப் புகழ்கிறது. அது இவர் பல இராணுவ வெற்றிகளை அடைந்ததைக் குறிக்கிறது. [3]

பிருத்விராஜா விஜயத்தின் கூற்றுப்படி, விக்ரகராஜாவுக்கு சந்திரராஜா மற்றும் கோபேந்திரராஜா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்: இவருக்குப் பிறகு சந்திரராஜாவும், அவருக்குப் பிறகு கோபேந்திரராஜாவும் பதவியேற்றனர். [2] பிற்கால ஹம்மிர மகாகாவ்யம் சந்திரராஜாவை ("ஸ்ரீ சந்திரா") விக்ரகராஜாவின் மூதாதையரான நரதேவரின் மகன் என்று குறிப்பிடுகிறது. [4]

சான்றுகள்[தொகு]

  1. Anita Sudan 1989, ப. 116.
  2. 2.0 2.1 R. B. Singh 1964, ப. 55.
  3. R. B. Singh 1964, ப. 88.
  4. Anita Sudan 1989, ப. 23.

உசாத்துணை[தொகு]

  • Anita Sudan (1989). A study of the Cahamana inscriptions of Rajasthan. Research. இணையக் கணினி நூலக மைய எண் 20754525.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_விக்ரகராசன்&oldid=3429055" இலிருந்து மீள்விக்கப்பட்டது