பேச்சு:வேதம்
கருத்து[தொகு]
134.76.63.129 என்னும் பெயர் அறிவிக்காத பயனர் கூறிய (நான் மறை பற்றிய) கருத்துகள் உள்ளன என்றாலும், அவர் இங்கு உள்ளதை அழித்துவிட்டு அப்படி எழுதியது சரியல்ல. அவர் கருத்துகளை தக்க முறையில் தக்க இடத்தில் கட்டுரையில் இடலாம். --செல்வா 21:50, 10 அக்டோபர் 2010 (UTC)
- இதனை இப்பொழுது ஓரளவுக்குச் செய்துள்ளேன். சமசுக்கிருத வேதங்கள் "த்ரயீ" (மூன்று) என்று பல இடங்களில் கூறப்பட்டு உள்ளன. அதர்வண வேதத்து வழி வந்தவர்களாக கூறுவோர் மிகச்சிறுபான்மையர், அவர்களின் வரலாறுகள் ஐயப்படும்படியாக உள்ளன. சதுர் வேதம் (நான்கு வேதம்) என்று சொன்னாலும், எப்பொழுதில் இருந்து நான்கு வேதம் என்பது தெளிவில்லை. தமிழ் நூல்களில் நான்மறை என்று கூறுவது அறம் முதலான நான்மறையை சிவபெருமான் ஆலமரத்தின் கீழிருந்து கற்பித்தார் என்றும், இதுபோலவே திருமாலிய இலக்கியங்களும் சிறிது வேறாகக் கூறுவதாலும், நான்மறை என்பது சில இடங்களிலாவது வேறு பொருள் கொண்டது என்பது தெளிவு. இருக்கு, யசுர், சாம வேதங்கள் பற்றியும், வடமொழி வேதங்கள் பற்றியும் தெளிவாகத் தமிழ்நூல்களும் கூறுகின்றன. எனவே உண்மையான முறையில் சாய்வின்றியும், கருத்துகளைத் தெளிவாக உணர்த்துமாறும் இக்கட்டுரை எழுதப்பட வேண்டும். கிறித்தவர்களும், இசுலாமியரும் கூட தங்கள் சமய நூற்களை வேதம் என்கின்றனர். இவற்றையும் போதிய அளவு தெளிவு படுத்தி, அதற்கான பிறகட்டுரைகளுக்கு வழிகாட்டும் தர வேண்டும்.--செல்வா 22:20, 10 அக்டோபர் 2010 (UTC)
சமயம்[தொகு]
வேதம் 2402:4000:124C:E3D8:1:0:A560:177B 15:48, 7 அக்டோபர் 2022 (UTC)