பேச்சு:மகாபாரதம்
சில பதில்கள் சில கேள்விகள்[தொகு]
- மகாபாரத மரபுகளின் பட்டியல் ஆனைத்து புராணங்களிலுமே உண்டு. மகாபாரத வம்சம் சந்திர வம்சம் என்பதாலும், சந்திர சூரிய வம்ச மரபுகளை விலக்குவதே புராணத்தின் 5 நோக்கங்களில் ஒன்றாகவும் இருப்பதால் அந்த வாக்கியத்தில் ஆதாரம் தேவை என்று கேட்கப்பட்டதை நீக்கி தகுந்த ஆதாரமும் தந்திருக்கிறேன்.
- மகாபாரத காலம் வருடம் பற்றி எல்லாம நிறைய கருத்துகள் உள்ளது அதனால் வருட காலமெல்லாம் இங்கு கொடுக்கும் போது யார், எங்கு, எந்த நூலில், எதனால் எப்போது கொடுத்தார் எனக் கூற வேண்டும். ஆனால் இங்கு அவை எவையும் தரவிலை.
- இந்து தொன்மங்களின் வருடங்களை பொதுவாக 2 கருதுகோள்களை கொண்டு அறியலாம்.
- திராவிடக் கருதுகோள் - மகாபாரத ராமாயண்மெல்லாம் கி.மு. 1000க்கு பின்னரே நடந்தது. இதற்கு ஆதாரமாக பெருஞ்சோற்றுதியனையும், மகாபாரதத்துக்கு பிந்தியதே ராமாயணம் என்பதை அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு வளர்ச்சியையும் கொண்டு நிறுவுவர்.
- ஆரியக்கருதுகோள் - மகாபாரத ராமாயணமெல்லாம் போன யுகங்களின் போது நடந்ததாகக் கூறுவர். அதாவது மகாபாரத காலம் கி.மு. 3000க்கு முன்னென்றும் ராமாயணம் அதற்கும் முந்தியது என்றும் கூறுவர்.
அதனால் வாக்கியங்கள் மேல் கேட்டது போல் யார், எங்கு, எந்த நூலில், எதனால் எப்போது கொடுத்தார் என்பதைக் கூறுவது போல் இருக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:46, 30 மே 2012 (UTC)