பேச்சு:பசுபதிநாத் கோவில்
சில தொடர்கள் நீக்கம்[தொகு]
நான் சில தொடர்களை நீக்கியுள்ளேன். சரிபார்க்கவும். மகத்மயாவின் படியும் இம்வாத்கண்டாவின் படியும் என்னும் தொடரை மரபின் படி என்று சுருக்கியுள்ளேன். நான் நீக்கிய பிறதொடர்கள் மிகையாகவோ, தேவையில்லாததாகவோ இருந்ததால் நீக்யுள்ளேன். எதற்கும் சரிபார்ப்பது நல்லது. அந்தணர் என்னும் சொல் தமிழில் இரட்டுற மொழியும் ஒன்று. அந்தணர் என்றால் அன்பு பூண்டவர், உள்ளத்தால் நல்லவர், அரியதொரு பண்பட்ட உள்ளம் கொண்டவர் என்று பொருள். அந்தணர் குலத்தில் பிறந்தார் என்றால் நல்ல்வோர் குடுபத்தில் பிறந்தார் என்றே பொருள். அந்தணர் என்போர் அறவோர் என்னும் திருக்குறளே வரையறை. இது சாதி, வருணம் சார்ந்தது அல்ல. எப்படி சான்றோர், நல்லோர் என்பன சாதி, வருணம் சாராததோ, அதுபோலவே அந்தணர் என்பது சாதி, வருணம் சாராதது. கிறித்துவரையும், இசுலாமியரையும் மேற்சொன்ன பண்புகள் இருப்பின் அந்தணர் என்று அழைக்கலாம். ஆனால் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலும் வேண்டும். --செல்வா 17:22, 13 பெப்ரவரி 2011 (UTC)